படம் - 2
விண்ணை தாண்டி வருவாயா
முழு நீள காதல் கதை. இரண்டு கதாபத்திரங்கள். Dialogue driven. இப்படி ஒரு படம் எடுக்கவும் கொஞ்சம் தைரியம் வேண்டி இருக்கிறது இன்றைய தமிழ் சுழலில். 'விண்ணை தாண்டி வருவாயா' ஒரு candy-floss காதல் கதை. கார்த்திக் - ஜெஸ்ஸியின் காதல் ஆரம்பித்ததில் இருந்து பிரிவு வரை. அவ்வளவே. Cinematic சீன்கள் உண்டு. காதல் பற்றி தமிழ் சினிமாவின் நம்பிக்கைகள் சிலவும் உண்டு. ஆனாலும் காதலின் சில கோணங்களை ரொம்ப வசனம் பேசாமல் எடுத்து வைக்கிறது. சில காட்சிகள் என்னை ஒரு 12 வருடங்கள் பின்னோக்கி இழுத்தன. மறக்க முடியாத சில நிகழ்வுகள், ஆறியதாய் மறந்து போன ரணங்கள், பிரிவின் துக்கம், கடைசி சந்திப்பு. சில விஷயங்கள் எல்லோருக்கும் பொதுவாய் இருப்பதுதான் சுவாரசியமே. அபத்தமாய் காதல் பற்றி வசனம் பேசாமல், கொஞ்சம் நக்கலுடன் காதலின் பைத்தியகாரதனத்தை காட்டியது, நாயகன் சபதம் போடுவது, எரிச்சலூட்டும் தோழி, தோழர்கள் கூட்டம் போன்ற காட்சிகள் இல்லாததாலேயே எனக்கு பிடித்தது.
சிம்பு , இது போல் இன்னும் சில படங்கள் கொடுத்தால் ரசிக்கலாம். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. த்ரிஷா aunty போல் இருக்கிறார். சீக்கிரம் அக்கா வேடங்களில் பார்க்கலாம். ரஹ்மான் தான் படத்தின் பலம்.
அடுத்து 'அங்காடி தெரு' பார்க்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
The Discovery and Conquest of Peru - Zarate.
பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...
-
முள்ளால் எழுதிய ஓலை by உ.வே.சாமிநாதையர் My rating: 5 of 5 stars தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களின் 'என் சரித்திரம்' எ...
-
எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை நினைவுகள் படித்தேன். விந்தன் தினமணி கதிரில் எழுதியது. விந்தனின் கதைகள் படித்திருக்கிறேன். முழுக்கவும் உரையா...
-
ஆலங்கோட்டு லீலா கிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய இந்த புத்தகம் சந்தியா பதிப்பகத்தின் மூலம் மொழி பெயர்த்து கிடைக்கிறது. இந்த வருட புத்தக கா...
No comments:
Post a Comment