அழகர் சாமியின் குதிரையும், மரம் வெட்டிகளும்

சென்ற வாரம் 'அழகர்சாமியின் குதிரை' பார்த்தேன். பாஸ்கர் சக்தியின் கதை படித்த நினைவில்லை எனினும், படம் ஒரு நல்ல குறு நாவல் படித்த திருப்தியை தந்தது. குதிரை என்பதே ஒரு குறியீடாய், ஒவ்வொருவருக்கும் ஒன்றாய் வருகிறது.
அழகர்சாமிக்கு அவன் பிழைப்பாய், ஊருக்கு அழகர் சாமியாகவும், ஊர் பிரசிடெண்டுக்கு அவர் பதவியை காக்க வந்த வரவாய் என்று எல்லோருக்கும் எல்லாமாய் உருவகம் எடுக்கிறது.
இடையில், திருப்பூருக்கு வேலைக்கு பிள்ளைகளை அனுப்புவது, ஊர் மைனரின் அட்டகாசங்கள், உளவு பார்க்க வரும் போலீஸ் குறி சொல்லி ஆவது, ஊர் கோடங்கி செய்வினை செய்வது என்று சிறு சிறு நிகழ்வுகள். இதுதான் கதை, பாடல், சண்டை என்று எதுபற்றியும் கவலையுறாமல் பயணிக்கிறது.
குதிரையே ஊரின் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணமாகவும், காரணமில்லாமலும் இருக்கிறது. The absurdness of the setting is the reason for the absurdness itself. குதிரை இந்த absurdness இன் மையமாய் இருந்து அதை சுற்றி இருப்போரின் வாழ்வை நகர்த்துகிறது. இறுதியில் மரக்குதிரை மாறவும் மாறி எல்லோருக்கும் அருள் பாலிக்கவும் செய்கிறது. நல்ல படம்.
------------
சிபியின் புத்தகம். இது பதினாலாவது அத்தியாயம். அத்தியாயம் ஒன்றில் பாபரிடம் ஆரம்பிக்கும் புத்தகம், பதிமூன்று அத்தியாயங்களில், முகலாய அரசர்கள், சிவாஜி, முதலானோரை விவரித்து விட்டு, ஒரு திருப்பம் போல் இந்த அத்தியாயம் வருகிறது. எனக்கு இந்த புத்தகத்தில் பிடித்த அத்தியாயம் இதுவே. சிபி வெறுமனே படிக்காமல், படித்ததை யோசித்து சில கருது கோள்களை உருவாக்கி கொள்கிறான் என்பதை போன்று சந்தோசம் தரக்கூடியது எது?

Sibis Book - Chapter 1 - Babur

Sibis Book - Chapter 1 - Babur

-------------
"விளையாடு ஆயமொடு வெண்மணல் அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகய
'
நெய்பெய் தீம்பால் பெய்துஇனிது வளர்த்தது
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும்' என்று
அன்னை கூறினள் புன்னையது
நலனே அம்ம! நாணுதும், நும்மொடு
நகய விருந்தின் பாணர் விளர்இசை கடுப்ப
வலம்புரி
வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறைகெழு கொண்க! நீ நல்கின்,
இறைபடு நீழல் பிறவுமார் உளவே!"
-
நற்றிணை
சுருங்க சொல்லின், 'நீ வளர்த்த இம்மரம் உனக்கு தங்கை போன்றது' என்று அன்னை சொல்லி இருப்பதால், உன்னோடு இம்மரத்தடியில் இன்புற நாங்கள் நாணம் அடைகிறோம் என்று தோழி கூறுகிறாள்.
புன்னை மரத்தை தங்கையாக பார்க்கும் ஒரு கலாச்சாரம் இன்று அடைந்துள்ள சீரழிவு பற்றி சொல்ல தேவை இல்லை.
குறுந்தொகை படித்திருக்கிறேன். நற்றிணை தேடி படிக்க வேண்டும்.

சிபியின் புத்தகம்

சிபி ஒரு வழியாக அவரது கதைகளை எழுதி முடித்து விட்டார். 182 பக்கங்கள் விரியும் அந்த புத்தகம், முகலாய மன்னர்களின் கதைகளில் இருந்து, துணுக்குகள், கார்ட்டூன், சித்திரங்கள், உலக கோப்பை பற்றிய விவரங்கள், சுற்றுச்சூழல் என பல விசயங்களை தொட்டு செல்கிறது. முழுவதும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தை, ஒரு ஹிந்தி கட்டுரையும் உண்டு, கணினியில் ஏற்றும் பொறுப்பு என்னிடம் கொடுக்க பட்டுள்ளது. அதன் நடுவே, எனக்கு பிடித்த ஒரு (சிபியின்)சிறு கவிதை.



For Sibi, poem is a matter of rhyming words. It does not matter whether it makes sense as a whole but if the couplets rhyme it is more or less what is needed. Here are his poems from 'Chapter 45' of his book (as written by him).


"My father is in Check post
I like to eat bread toast


In forest lives the monkey
My favorite game is hockey


My uncle chases a mouse
In our house


I am afraid of lizard
In TV I like the wizard


In pond lives geese
Mice likes cheese


Outside it is rain
Ant go outside to get pain


My story book is fantastic
Basket is made of plastic


My TV name is Sony
My dog's name is Gony"
- M.Sibi Pranav


Rhymy poem

"My favorite chocolate is Munch
I have a flower bunch.


We talk in phone
My favorite ice is cone.


First month is January
My chocolate is Cadbury.


Drum gave a bang
My family is a gang.


My name is Solly
My brother name is Golly


I have a book
My mother is a great cook."
-Sibi Pranav



I can go on about how Sibi explores the conceptual underpinnings of the post-modernist thoughts by deconstructing his world into words. But that's for another day.

குவியம் இல்லா ஒரு காட்சிப் பேழை

எம்.ஆர்.ராதாவின் சிறைச்சாலை நினைவுகள் படித்தேன். விந்தன் தினமணி கதிரில் எழுதியது. விந்தனின் கதைகள் படித்திருக்கிறேன். முழுக்கவும் உரையாடல்கள் மூலமாக கதையை நகர்த்துவார். இது எவ்வளவு கஷ்டம் என்பது ஒரு முறை இது போன்று எழுதி பார்த்தால் புரியும்.
அதே நடையில் ஒரு மனிதரின் நினைவுகளை எழுதுவது என்பது இன்னமும் கடினம். உதாரணமாக ஒரு நிகழ்ச்சியின் தாக்கங்களை பற்றி இரு வரிகளில் தன் பார்வையை பதிவு செய்யாமல் நிகழ்வுகளை எழுதுவது எப்படி சாத்தியப்பட்டது என்பது எனக்கு வியப்பே.
அதுவும், எம்.ஆர். ராதா போன்ற ஒரு கலைஞனின் நினைவுகளை நடுவில் கருத்து சொல்லாமல் பதிவு செய்வது இன்னமும் கடினமே. இருந்தாலும் ஓரிரு இடங்களில் அதே உரையாடல்கள் மூலமாக தனது கருத்துகளை சொல்லவும் செய்கிறார். ஆனால் இது
மிகவும் சில இடங்களில்.
இது ஒரு புறமிருக்க, இது போன்ற கலைஞன் இன்று இல்லையே என்ற சிறு ஏக்கமும் எழாமல் இல்லை. அனுஷ்காகளும், தமன்னாக்களும் கலைமாமணியாய் உலா வரும் இன்றைய தமிழகத்தை பற்றி
எம்.ஆர். ராதா என்ன சொல்லி இருப்பார் என்றும் தோன்றாமல் இல்லை. இன்று அது மாதிரி ஒரு கருத்தை சொல்லும் தைரியமும் எவரிடமும் இல்லை என்பதும் தோன்றுகிறது.
கலை என்பது மக்களுக்காக என்று ஒரு கொள்கையுடன், வேறு எவரை பற்றியும் கவலை இல்லை என்று வாழ்வது என்பது ராதாவின் வாழ்க்கை. அவர் விவரிக்கும் ஒவ்வொரு நிகழ்வும், தனது பெயரை எதிர்காலத்திற்கு பதிவு செய்யும் விஷயமாய் மட்டும் இல்லாமல், தனது கடந்த காலத்தை எந்த ஒரு judgmental mentality யும் இல்லாமல் பதிவு செய்கிறார். எல்லோரை பற்றியும் ஒரு கருத்து சொல்கிறார். எவரையும் விட்டு வைக்காமல் விமர்சனம் செய்கிறார். தமிழகத்தில் வீழ்ச்சி என்பது இது போன்ற நிகழ் கால கலைஞன் எவனும் இல்லாமல் பார்த்துகொண்டது என்றே தோன்றுகிறது.
-------------
சமீபத்தில் ஓர்
இரவில் இந்த பாடலை கேட்டேன். கேட்டவுடன் பாடலின் இந்த ஒரு வரி தலைக்குள் நுழைந்துவிட்டது. 'குவியம் இல்ல ஒரு காட்சிப் பேழை' . சாதரணமான ஒரு உவமை தமிழில் சொல்லும் பொழுது ஏற்படுத்தும் பிம்பங்கள் தரும் இனிமை சொல்லமுடியாதது.

Calculator of Prahalada

This is an update on the school days of Sibi. Sibi is now finishing his fourth standard and I believe, is having a blast doing it as well. At times, I am left wondering what I need to do to facilitate a channel for his energy. At times, he makes me wonder why he is such a lazy boy. I think the real Sibi is somewhere in between.
<<<<<>>>>>
The blog title is a indicator of this conundrum. He is called in his class as the 'Calculator of Prahalada' (Prahalada being his section name, his school names each section with a puranic character name) for the reason that he handles big numbers at ease and is able to do the calculations fast and without using a notepad. Nothing is a challenge to him as he understands the intricacies of Mathematics and raises a thousand questions as well. At the same time, his exam papers are full of frustration vented by his Maths teacher trying to come terms with the fact that he seems to be unable to score a centum. In fact in his half-yearly exam paper she just wrote 'Why? Sibi, Why?'. That kind of existentialist tantrum seems to be the norm for anyone coming across Sibi.
In that paper, he simply forgot to do a sum and that cost him the centum. He does not put any weight to it and just shrugs and moves on while his mother is left fuming at his absolute indifference. I am flummoxed to figure how to take it. Talking to him, he is all earnest and says the right things and promises to be more careful the next time. And he goes on to do the exact same thing. It has all the qualities of a farce. And of course, there is an element of innocence still left in him which I don't want to destroy by putting him into the grind.

<<<<<>>>>>
Today he told me of a dream he had last night. It was about a front page news bulletin saying 'Muthu Prakash has won the noble prize (he is the grandson of Thangamani)'. He was all sincere explaining about it and we had a good laugh together.
<<<<<>>>>>
This academic year, he cleared two exams in Hindi. The first one is 'Pariksha' which is a basics test and he cleared 'Prathmik' last month. He was actually complaining that everyone was talking to eachother in the 'Pariksha' exam hall and were sharing papers. Though he scored a bit low marks (66), he had no regrets about not copying his way through. 'Prathmik' was conducted more professionally and he scored the first mark in his class and was ecstatic with a look saying 'Now who is laughing?' kind of smile. Though I have lots of small fights with him, I never had one over trying to fix his moral compass. He got that right always.
<<<<<>>>>>
During this year's sports day, Sibi has won a second prize in Relay running and came out winner in Kho-Kho. Given that I've never participated in any kind of sports, it is a wonder that he managed to do this without any encouragement from us.
<<<<<>>>>>
The latest obsession he has is story writing. Last count he has written about 84 pages of different stories (starting with his all time favorites, Moguls to the Indian freedom struggle to a letter to the woodcutters about not cutting trees). It even includes a chapter in Hindi. He keeps writing without watching TV or spending time in computers. The reason he has come up with is to 'become famous'. It is amazing to see the kind of focus he puts into these activities. He cannot think of anything else and every free minute he has is going into the writing of this magnum opus. And with his absolutely loaded schedule, it is amazing that he managed the 84 pages in about 9 days. (Planning to get some of that typed in..)
<<<<<>>>>>
And in this year's fancy dress competition in his school, he dressed as, who elxe, but the Moghul emperor Akbar. And amidst the standard Abdul Kalams and the God/Goddesses of his class, he stood out and won the applause. Whether he won a prize, we do not know as it was never announced. His closest friend is a kid named Madhavan (whom he calls Maddy). Since this fancy dress competition took place, Sibi and Maddy are named the Akbar-Birbal of the class.
<<<<<>>>>>
There are a hundred other things he has done or not done. But at times, I am always left to wonder whether this is the same little boy who shied away to talk to anyone. The other thing that he likes most these days is to visit the 'Anna centenary library'. It is when I see him running around the shelves picking up books and running through them in the couple of hours we used to spend there, I always feel like looking at a piece of myself.

கொடும்பாளூர் வானதி

சென்ற வாரம், மதுரைக்கு காரில் சென்று இருந்தோம். செல்லும் பொழுதே, விராலி மலைக்கு அருகில் கொடும்பாளூர் செல்லும் வழிகாட்டி ஒன்று பார்த்தேன். நேற்று அங்கிருந்து திரும்பும் பொழுது, கட்டாயம் பார்த்து வரவேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.

மதுரையில்
இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில், தேசிய நெடுஞ்சாலை 45B இல் இருக்கிறது 'கொடும்பாளூர் சத்திரம்' என்னும் ஒரு சிறு கிராமம். ந்த கிராமத்தின் வழியே புதுகோட்டை செல்லும் வழியில் ஒரு 2 கிலோமீட்டர் சென்றால் வருகிறது 'கொடும்பாளூர்' கிராமம். ஒரு மாட்டு வண்டி செல்லும் அளவிற்கே உளள ஒரு பாதை, சி குடிசை வீடுகள் பாதையை ஒட்டி செல்லும் ஒரு கால்வாய், புதிதாய் விதைக்கப்பட்ட வயல்கள், இவற்றின் முடிவில் உள்ளது 9 ம் நூற்றாண்டை சேர்ந்த 'மூவர் கோவில்'.

பூதி விக்ரமகேசரியின் வரலாறு சொல்லும் கல்வெட்டு
இன்றைய கொடும்பாளூர் கிராமம் 9 ம் நூற்றாண்டில் இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி என்பவரால் ஆளபபட்டு வந்த ஒரு சிற்றரசு. இந்த பூதி விக்கிரமகேசரி முதலாம் பராந்தக சோழனின் அதிகாரத்தில் சோழ அரசில் பல விகளும் வகித்து வந்தார். அவர் எழுப்பி 'மூவர் கோவில்' இன்றைய கொடும்பாளூர் கிராமத்தில் வயல்களுக்கு நடுவில் கடந்து போன சரித்திரத்தின் நினைவாக நின்று கொண்டு இருக்கிறது. பூதி விக்கிரமகேசரி மற்றும் அவரது இரண்டு மனைவிகளின் நினைவாய் மூன்று சிறு கோவில்களாக எழுப்பப்பட்ட இந்த கோவிலில் இன்று இரண்டு மட்டுமே முழுமையாய் நின்று கொண்டு இருக்கிறது. மூன்றாவது கோவிலின் அடித்தளம் மட்டும் இருக்கிறது. கோவிலின் பிரகாரம், சுற்று கோவில்கள், கொடி கம்பம், சிலைகள் என்று எதுவும் இல்லை. கழ்வில் கிடைத்த சிலைகளும் இப்போது திருச்சி அருங்காட்சியகத்தில் இருக்கிறது.
சோழர் வரலாறு, கொடும்பாளூர் என எல்லாவற்றையும் விட என்னை இந்த கோவிலும் கிராமமும் இழுத்ததற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. இருக்குவேள் பூதி விக்ரமகேசரியின் மகள் வானமாதேவி என்ற வானதி. இந்த வானதிதான் ராஜ ராஜ சோழனை மணந்து சோழ பேரரசுக்கு பட்டத்து ராணி ஆனவள். கல்கியின் 'பொன்னியின் செல்வனின்' கதாநாயகியாக வருவதும் இதே வானதிதான். என் மகளுக்கு பெயர் வைக்க காரணமாக இருந்ததும் அதே வானதிதான். அந்த வானதி இளவரசியாய் இருந்த இடத்தை எங்கள் வீட்டு இளவரசி பார்க்க வேண்டாமா?செல்லும் பாதை கொஞ்சம் கரடு முரடாய் இருந்தாலும் மூவர் கோவில் ஒரு பார்க்க வேண்டிய இடமே. கோவிலின் உள்ளே உள்ள வெற்று வெளிதான் தஞ்சை கோவிலின் ஆகாச லிங்கத்தின் முன்னோடி என்றார் இந்த இடத்தின் காப்பாளர். ஏனைய சோழர் கால சிற்ப நுட்பங்கள் பிட்சாடனர், லிங்கம் முதலியவும் காண கிடைகின்றது.கொடும்பாளூர் பெயர் காரணத்தை ஒட்டி அவ்வையின் சாபமாக ஒரு கர்ண பரம்பரை கதையும் கேட்டோம். எத்துனை அவ்வைகள் இருந்தால் இத்துனை கதைகள் கிடைக்கும் என்று எண்ணி கொண்டே சென்னை திரும்பினோம்.

மேலும் படங்கள் இங்கே
https://goo.gl/photos/DSsggYCUaowmgDjx5

'இதற்கு முன்னும் இதற்கு பிறகும்'

மனுஷ்யபுத்ரனின் கவிதை நூல் வெளியிட்டு விழாவிற்கு போய் இருந்தேன். கவிதைகள் வாசிக்கும் மனநிலை எப்போதோ தொலைந்து போய் விட்டாலும் இது போன்ற நிகழ்வுகளின் நிழலில் எங்கேனும் கண்டெடுக்கலாம் என்று ஒரு சிறு ஆசை.
கல்யாண்ஜியும் கலாப்ரியாவுமே எனக்கு நவீன கவிதைகளை அறிமுகம் செய்தவர்கள்.

"...................
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவைஎழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை. "

போன்ற கவிதைகள் தந்த அனுபவத்தை இன்றும் வேறு எதுவும் தரவில்லை.
ஆனந்தின் 'காலடியில் ஆகாயம்' ஒரு புதிய உலகத்தை அறிமுக படுத்தியது. அந்த
சிறு தொகுப்பு நிதமும் ஒரு அனுபவம் தந்தது. விக்ரமாதித்யன் அறிமுகம் தவிர்க்க முடியாததாகியது.

"கைபட

தளர்வது முலை
கவலைப்பட
தளர்வது மனம்"

போன்ற கவிதைகள் கொடுத்த அதிர்வுகளும், மெல்லிய நகையுடன் வார்த்தைகள் உருவாக்கும் படிமமும் மயக்கியது. இதன் பிறகே பிரமிள், ஆத்மாநாம், பசுவய்யா முதலானவர்களை தேடி படித்தேன்.

மனுஷ்யபுத்திரன் அறிமுகம் சுஜாதாவின் மூலமாக வந்தது. 'என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருகிறார்கள்' படித்தேன். ஆனால், எனது கவிதை படித்தல் கிட்டத்தட்ட நின்று விட்ட தருணம் அது. நிறைய மாற்றங்களும், ஏமாற்றங்களும் நிறைந்த நாட்கள். வந்து விழும் எழுத்துகள் கடந்த காலத்தை நினைவுருத்துவதாக எண்ணி தமிழ் வாசிப்பதையே நிறுத்தி வைத்திருந்த நாட்கள்.

அதனால் தானோ என்னவோ இந்த புத்தக வெளியீடுக்கு போக தோன்றியது. விக்ரமாதித்தனும் கோணங்கியும் குற்றாலத்தில் நடத்திய கலாட்டாக்களை பற்றி கேள்விப்பட்டு இருந்த எனக்கு இந்த விழா ஒரு அதிர்ச்சியாகவே இருந்தது. கிட்டதட்ட ஒரு ராஜா பட்டி மன்றம் போல் நடந்த நிகழ்ச்சி. என்ன ஒரு தரப்பு மட்டுமே வந்து இருந்தது. வசந்த பாலன், தமிழச்சி தங்கபாண்டியன், சாரு, எஸ். ரா போன்றோர் ஏன் மனுஷ்ய புத்திரன் ஒரு பாப்லோ நெருடா போன்று உலகெங்கும் பேச படவில்லை என்பதையே பேசினார்கள். ஆளுக்கு ஒரு மூன்று கவிதைகளை வாசிக்கவும் செய்தார்கள்.

ஒரு கவிதை நூல் வெளியீட்டு விழாவில் கவிதைகள் பற்றிய விவாதத்தை எதிர் பார்த்து சென்ற எனக்கு கொஞ்சம் ஏமாற்றமே. யார் அதிகமான Latin American, Russian பெயர்களை பேசுவது என்பதில் ஒரு சிறு போட்டியே நடந்தது. Marguerite Duras, Lenin, Dostoevsky, Tolstoy, Lorca, Borges, Neruda, Mayakovsky போன்ற சில பெயர்கள் நினைவில் இருக்கிறது. இந்த பட்டியலில் லெனின் என்ன செய்கிறார் என்ற கேள்விக்கு சரியான விடை இல்லை. பிரபஞ்சன் மனுஷ்ய புத்திரன் டுராஸ்க்கும் Dostoevsky கும் நடுவில் இருப்பதாக கூறினார். ஒரு வேளை எனது சிறு இலக்கிய அறிவிற்கு அது எட்டவில்லை என்றே நினைக்கிறேன்.

.பு பேசும் பொழுது சக கவிஞர்கள் யாரும் வராதது பற்றி கொஞ்சம் வருத்த பட்டார். அதே வரியில், ரா. பார்த்திபன் வரவில்லை என்றும் வருத்தபட்டு கொண்டார். நிஜமாக அவர் யாரை குறித்து வருந்தினார் என்று தெரியவில்லை. நா. முத்து குமாரும், தமிழச்சியும் 'போன்ற' வேறு சில கவிஞர்களை எதிர் பார்த்தாரோ என்னவோ.

ஆனால், சிறிது நாட்களாய் தளர்ந்து கிடந்த மனதில் ஒரு உற்சாகத்தை இலக்கியம் மட்டுமே கொடுக்க முடியும் என்பதை உணர்தேன். விழா முடிந்து இரவு 10 மணிக்கு மவுண்ட் ரோட்டில் கார் கண்ணாடிகளை திறந்து விட்டுக் கொண்டு, முகத்தில் அறையும் சிலீர் காற்றின் நடுவே மனதிற்கு பிடித்த பாடலை அலற விட்டு கேட்டுக்கொண்டு வந்த போது ஒரு கவிதைக்குள் இருந்ததை உணர்தேன். நீண்ட நாட்களுக்கு பிறகு. அதற்கு மட்டுமாவது நன்றி சொல்ல வேண்டும்.

1. நடந்து முடிந்த விழாவிற்கு பிறகு, வெளியில் வைத்திருந்த வெளியிடப்பட்ட புத்தகத்தை வாங்க தைரியம் வரவில்லை. எனவே முதலில் Lorca, Borges எல்லாம் படித்துவிட்டு .பு விடம் வரலாம் என்று இருக்கிறேன்.
2. அடுத்த வாரம் எஸ்.ராவின் 'துயில்' புதின வெளியீடு இருக்கிறது. ஒரு ஐந்து நிமிடம் தலை காட்டிவிட்டு புத்தகத்தை மட்டும் வாங்கி கொண்டு ஓடி வந்து விடலாம் என்று ஒரு எண்ணம்.

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...