முஸ்லிம் அம்மா
எனக்கு 'முஸ்லிம் அம்மா'வின் பெயர் தெரியாது. அவரது கதையும் என் அம்மா சொல்லி கொஞ்சம் தெரியும். அது எவ்வளவு தூரம் உண்மை என்றும் தெரியாது.
நான் பள்ளியில் படித்து கொண்டிருந்த நேரம். 5-6 வகுப்புகளாய் இருக்கலாம். அப்போதுதான் 'முஸ்லிம் அம்மா' அறிமுகமானார்கள் (எனக்கு). ஒரு முக்காடிடப்பட்ட வெள்ளை சேலை. கையில் ஒரு குடை. ஒரு சிறு பை. அதில் பல முறை வாசிக்கப்பட்டு மிகவும் பழையதான ஒரு பைபிள். இதுதான் 'முஸ்லிம் அம்மா'.
என் அப்பாவின் அம்மா ஒரு (மதம் மாறிய) கிறிஸ்தவர். மதுரை CSI (Church or South India)வில் உறுப்பினர். அங்கு ஊழியம் பார்ப்பவர் 'முஸ்லிம் அம்மா' (ஊழியம் - சர்ச்சில் வேலை செய்வது, உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று ஜெபம் செய்வது போன்ற காரியங்கள்). அப்பொழுது நண்பர்கள் ஆனவர்கள் என் அப்பாம்மையும் 'முஸ்லிம் அம்மா'வும்.
அந்த நட்பின் காரணமாய் எங்கள் வீடுகளுக்கும் (பெரியப்பா, சித்தப்பா வீடுகளுக்கும்) வருவார். அநேகமாய் மாதம் ஒரு முறை என்று ஞாபகம். எனக்கு நினவிருப்பதல்லாம் அவர் நல்ல வெயில் காலங்களில் வருவார். வந்தவுடன் ஒரு தம்பளர் தண்ணீர் குடிப்பார். என் அம்மா ஒரு பாயை விரித்து என்னையும் என் தம்பியையும் உள்ளே வர சொல்லுவார்கள். எல்லோரும் மண்டியிட்டு அமர்ந்ததும் ஜெபம் தொடங்கும்.
'முஸ்லிம் அம்மா' கிறிஸ்தவ ஊழியம் பார்ப்பதன் முரண் எனக்கு உரைக்க சில வருடங்களானது. அப்போது தான் என் அம்மா எனக்கு முஸ்லிம் அம்மாவின் கதையை சொன்னார். மதுரை கோரிப்பாளையத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். பதின் வருடங்களிலேயே கிறிஸ்தவ மதத்தின்பால் ஈர்க்கப்பட்டு கிறிஸ்தவராக மாற முயற்சி பண்ணி இருக்கிறார். குடும்பத்தில் பலத்த எதிர்ப்பு. பெல்டில் அவரது தந்தை அடித்ததாகவும், அதன் தழும்புகள் அவரது முதுகில் இன்னும் இருப்பதாகவும் அம்மா சொல்லி கேட்டு இருக்கிறேன். அதன் பின்னர் ஒரு கட்டத்தில் அவர் ஞானஸ்தானம் பெற்று கிறிஸ்தவராகி விட்டார். ஆனால் திருமணம் செய்யாமல் தன் வாழ்க்கையை சர்ச்சுக்கு கொடுத்து விட்டார். தனியே ஒரு வீட்டில் வாழ்ந்து, தினமும் சர்ச்சுக்கு சென்று வேலைகள், ஜெபம் என்று வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.
வீட்டில் ஜெபம் செய்யும் போது அவர் முதலில் பைபிளில் இருந்து சில வசனங்களை வாசிப்பார். பின்னர், என் அப்பாவின் வியாபரம், எங்கள் படிப்பு என பல விசயங்களை தொட்டு செல்லும். இயேசு பலகணியில் இருந்து பல செல்வங்களையும், வைர, வைடூரியங்களையும் கொடுப்பதாக சொல்லுவர். நானும் ஒரு உப்பரிகையில் இருந்து எங்களுக்கு செல்வம் கொட்ட போவதாக சில காலம் நம்பிக்கொண்டிருந்தேன். கைக்கும் வாய்க்குமான எங்கள் குடும்ப போராட்டம் புரியும் வரை.
ஜெபம் முடிந்தவுடன் ஒரு காபியோ தண்ணீரோ கேட்டு வங்கி குடிப்பார். கையில் காசில்லாத குடும்பம். அம்மா ஒரு படி அரிசி கொண்டு வந்து 'முஸ்லிம் அம்மா'வின் பையில் தட்டுவார். சில வார்த்தைகளுக்கு பின் படி இறங்கி செல்வார். வெயிலில் அவர் அடுத்து எங்கு செல்வார் என்று சில நாட்கள் யோசித்திருக்கிறேன்.
நான் கல்லூரி சென்ற பிறகு அவரை சந்திக்கும் வாய்ப்பு குறைந்து விட்டது. அம்மா அவ்வபோது சொல்லுவார். நாங்கள் படித்து வேலை என்று வந்த பிறகு அது குறித்து அவர் மிகவும் சந்தோஷ பட்டதாக ஒரு முறை சொன்னார். அவ்வளவே. இப்போது 'முஸ்லிம் அம்மா' இறந்துவிட்டார்.
ஒரு முறை அவரை சென்று பார்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.
வெட்டுப்புலி
சமீபத்தில் நான் வேகமாக படித்த நாவல் "வெட்டுப்புலி". தமிழ்மகன் எழுதியிருக்கும் இந்த நாவல் ஒரு விதத்தில் எனக்கு "Forrest Gump"யை நினைவுக்கு கொண்டு வருகிறது. "வெட்டுபுலி" தீப்பெட்டியில் இருக்கும் படம் தனதுதாத்தாவிடையது என்று தெரியவந்ததும் கதை நாயகன் அந்தகதையை தேடி புறப்படுகிறான். தாத்தா சிறுத்தையை அடித்தகதைக்காக ஊத்துகோட்டையில் 1934 ல் ஆரம்பிக்கும் கதை நியூயோர்கில் 2010 ல் முடிகிறது.
வழியில் நாயகனின் குடும்ப கதையும் அதன் ஊடே வட தமிழகத்தின், திராவிடஇயக்கத்தின் வரலாறும் சொல்லப்படுகிறது. பெரியாரால் நடு சந்திக்கு கொண்டு வரப்பட்டு இன்றும் தீராத விவாதங்களோடு இருக்கும் 'சாதி' ஒரு முக்கிய பாத்திரம். திராவிட அரசியலால் பொது வாழ்விற்கு வந்த ஒரு தலைமுறை எப்படி disillusion ஆகிறது என்பது ஒரு கிளைக்கதையாக விரிகிறது.
அன்பழகன், பெரியார், அண்ணாதுரை, கலைஞர் என எல்லோரம் கதையின்போக்கில் வருகிறார்கள். சினிமா பேசாதிருந்து மெதுவாய் அரசியலில் நுழைந்து ஆட்சியை பிடிக்கிறது.
தாழ்ந்த சாதி பெண்ணை விரும்பியதால் ஊரை விட்டு ஓடிப் போன லக்ஷ்மணரெட்டியின் பேரன் ஒரு தாழ்ந்த சாதி பெண்ணை மணமுடிக்கிறான். தியாகராசன் திராவிட அரசியலை வெறுத்து பாண்டி 'அம்மா' பக்தனகிறான்.
கதை சின்னா ரெட்டியின் குடும்பத்தின் பல கிளைகளையும் தொட்டு செல்கிறது. சில இடங்களில் காலமும் முன்னும் பின்னுமாய் போகிறது. ஆனால் ஒருநேர்த்தியான கதையை சொல்லப்படுகிறது.
என்னை பொறுத்தவரை வித்தியாசமான முயற்சி. அவ்வளவே.
அடுத்து Ramachandra Guha's 'India after Gandhi'. புத்தகத்தின் அளவை பார்க்கும் போது இன்னும் ஒரு மாதமாவது ஆகும் படித்து முடிக்க.
பி. கு.
இன்றைய 'Sun Music'ல் ஒரு உரையாடல்.
compere - ஹலோ, வணக்கம். உங்களுக்கு இன்றைய மே தின வாழ்த்துக்கள்.
caller - ஆமா மேடம், உங்களுக்கும் 'தல' பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
compere - இல்லைங்க, இன்னைக்கு உழைப்பாளர் தினம். அந்த வாழ்த்துக்களைசொன்னேன்.
caller - அப்படியா, எதுக்கும் ஒரு அட்டகாசமான 'தல' பாட்டை போடுங்க.
இது போல ஒரு 10 -20 நிமிடங்களில் 2-3 பேர். எதற்கு இந்த 'உழைப்பாளர் தின' farce? பேசாமல் அடுத்த வருடத்தில் இருந்து மே 1 ஐ 'தல' பிறந்த நாளாககொண்டாடிவிட்டு போகலாம்.
இரண்டு புத்தகங்கள்
அதற்கு பிறகு, 'மகாபாரதத்தை' ஒரு கதையை மட்டும் இன்றி ஒரு காலவாழ்கையின் பதிவாகவும், இன்றும் இருக்கும் பல அறச்சிக்கல்களை எதிர்நோக்க ஒரு வழியாகவும், காந்தியின் 'கீதை' உரை படித்த பொழுது, மகாபாரதம்என்பது ஒரு dynamic entity ஆக, நாம் வாழும் வாழ்கையின் பல தரிசனங்களை உள்ளடக்கியதாக தோன்றியது.
வாசுதேவன் நாயரின் 'இரண்டாம் மூலமும்' (Randam Moozham - Malayalam), பிரதிபாராயின் 'யஜ்ன சேனி' (Yajna Seni - Oriya) யும் ஒரு அளவில் வாசிப்பு மற்றும்சிந்திக்க வைத்தாலும், இன்னும் இன்னும் படிக்க புத்தகங்களை தேடவேவைத்தது. என் விருப்பம் மகாபாரதத்தின் உரைகளோ, மொழிபெயர்ப்புகளோஅல்ல. மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இன்றைய கேள்விகளுக்கு பதில் தேடும் தேடலே எனது.
தற்கால இந்திய இலக்கியங்களின் வழியே இதனால் நான்அறிமுகபடுத்திகொண்ட எழுத்தாளர்கள் பலர். அரசின் அதிகாரத்தை எதிர்த்துபோரிடும் ஒரு பெண்ணை, மஹா ஸ்வேதா தேவி எழுதும் பொழுது அவளுக்கு திரௌபதி' என்று பெயரிடுகிறார். சிவாஜி சாவந்த், மராத்தியில் கர்ணனின் வாழ்க்கையை 'ம்ருத்யஞ்சய' என்று எழுதுகிறார். அந்த வரிசையில் கடந்த 3 மாதங்களில் நான் படித்த இரண்டு புத்தகங்கள்.
1. உப பாண்டவம் - எஸ். ராமகிருஷ்ணன்
'உப பாண்டவம்' மகாபாரதத்தின் ஒரு நீட்சியாகவே எழுதபடுகிறது. அச்வதாமனின் காலங்கள் தாண்டிய வாழ்வில் ஆரம்பித்து எல்லா பாத்திரங்களின் உள் மனச் சிக்கல்களை பேசி முடிகிறது.
'துரியோதனன் படுகளம்' கூத்தில் ஆரம்பித்து, ஏகலைவன், அம்பா, சிகண்டி, சஞ்சயன் என பலரின் எண்ணங்களை தேடி நீள்கிறது.
திரௌபதியின் மண சிக்கல்கள், சிந்தனை ஓட்டங்கள், அவள் கோபம், அவமானத்தில் எழும் சீற்றம் ஒரு போரில் முடிகிறது. மகாபாரதத்தில் என்னை மிகவும் 'பாதித்த' என்று சொல்லலாம் பாத்திரம் திரௌபதி. அவள் ஒருத்தி பொருட்டே போர் நடக்கிறது. தான் அவமானபடுத்தபட்டதற்கு ஓடும் ரத்த ஆற்றில் மட்டுமே தீர்வு என்று முடிவெடுத்து ஒரு பதினாலு வருடங்கள் ஐவரையும் வேறு சிந்தனை இன்றி செலுத்துகிறாள்.
"துரியன் உங்க சகோதரனைப் போலத்தான். அர்ச்சுனன்
போல பொம்பள கிட்ட கள்ளத்தனம் பண்றவன் கிடையாது'"
துரியன் திரௌபதியை சபையில் அவமதித்ததை தவிர வேறு தவறு செய்யதவனாகவே வருகிறான். குருட்டு தந்தைக்கு பிறந்து தான் உரிமையை நிலை நாட்டவே போரிட வருகிறதாக சித்தரிப்பு. எனக்கு உடன்பாடில்லை. இது துரியனை நல்லவனாக கட்டவே உதவும். துரியன் அதையும் மீறுபவன்.
தமிழில் ஒரு முக்கிய படைப்பு.
2. பார்வா - எஸ். எல். பைரப்பா (Translation - K Raghavendra Rao, Sahitya Akademi pubication)
'பார்வா'வை படிக்க ஒரு 2 மாதங்கள் ஆகிவிட்டது. இது ஒரு முழு மகாபாரத கதை என்பதோடு, நான் படிக்கும் நேர அளவும் கொஞ்சமே.
'பார்வா' மகாபாரதத்தை குந்தி, யுயுதனா, சஞ்சயா, பீமா, கர்ணன் என பலரின் பார்வை வழியே கதையை எடுத்து செல்கிறது. கதையின் mythological elements ஐ விலக்கி விட்டு வெறும் கதையாய், எல்லா 'Deus ex machina' நிகழ்ச்சிகளையும் விவரிக்க முனைகிறது. உதாரணமாக, திரௌபதி சபையில் வைத்து துகிலுரியப்படும் போது கிருஷ்ணன் வரவில்லை. திருதராஷ்டிரா, பீஷ்மர், விதுரர் முதலியோர் துரியோதனனை தடுத்து நிறுத்துகின்றனர்.
கிருஷ்ணன் ஒரு சிறு பாத்திரமே ஏற்கிறார். பீமனும் துரியோதனனும் கதை மாந்தர்களை இருக்கிறார்கள். தர்மன் சூதாடியாகவும், போர்களத்தில் கோழையாகவும் சித்தரிக்க படுகிறார். திருதராஷ்ட்ரன் வில்லனாகிறான். போர் திரௌபதியின் பொருட்டு அல்ல, பாண்டவர்களின் பிறப்பின் legitimacy இன் காரணமாக நடைபெறுகிறது.
போர்கள வர்ணனைகள் வெகுவாக வருகிறது. போரின் உக்கிரம், போர்களத்தின் சமத்துவம், அரை உயிருடன் இருப்பவனை சுற்றி காத்திருக்கும் கழுகுகள், நாய்கள், கழிவுகளின் நெடி, ரத்த பெருக்கு, அப்புற படுத்தாமல் கிடக்கும் பிணங்கள் என குரு ஷேத்திரம் இதுவரை இல்லாத ஒரு வர்ணனை பெறுகிறது.
என்னை பொறுத்தவரை 'பார்வா' கதையை அதன் மாயங்களில் இருந்து விடுவித்தாலும், தீவிரமான எந்த தத்துவத்தையும் முன் வைக்கவில்லை. கதா பாத்திரங்களின் மன சிக்கல்கள், போரின் அர்த்தமின்மை, பனிரண்டு நாட்கள் போருக்கு பிறகு அமைதியை யோசிக்கும் துரியனின் முரண் என எதுவும் பேசப்படவில்லை.
உத்தரையின் இறந்து பிறக்கும் மகனை வைத்து, குந்தியும் திரௌபதியும் குல விருத்தியை குறித்து விவாதிப்பதோடு முடிகிறது. கிருஷ்ணன் த்வாரகை அழிவதை பார்த்து கொண்டிருக்கிறான். தர்மன் போருக்கு பிந்தைய அமைதியை தாங்க முடியாதவனாக அரியணையில் இருக்கிறான்.
ஒரு வேளை, கன்னட மூலத்தில் கதையின் வீச்சு இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம்.
Sibi
April 15 will be Sibi's last day in school for 3rd standard. He has learnt a lot this year and I am sure he will continue to do so. What fascinates me (and has always fascinated me) is the way he learns. Though his fascination for the Mughals hasn't faded yet, he has picked up a new interest, the Atlas.
He has owned one for the past few years but hasn't shown any interest in it till recently. He started looking into it a couple of months back and started to learn the states and capitals. Now he can tell the state names or the capital names in whatever order. But thats ok. So he learnt the names of cities in the maps and can tell the state names if you can tell the city name (say like, Belgaum). So our little routine these days is for me to tell a city name and he will tell me the state name. Of course, there are places he did not know yet but he keeps updating himself.
He has this habit of writing down what he is reading, I mean, he writes down the entire thing. He has drawn the maps of the states and has noted down the cities and tries to recreate the atlas in his notebook! He has done this multiple times and I am not sure why he does that but then thats what he likes. Not just the atlas but the biography of the Mughal emperors he read in Wikipedia as well. Costs a lot of notebooks though.
And when I asked him what he wants from Odyssey last weekend, he promptly replied 'Atlas'. So he has got himself another one now. This is more a world atlas and he has already learnt about 30-40 states and their capitals in USA and this morning he told me that he has found that there are states in Canada as well. So I told him that almost all countries have states and he has a quizzical look on his face and said "'Then I need to learn all of it, huh". Happy that he has found something for the summer holidays.
Beyond taking a father's pride in stating this, what strikes me as odd is that I too owned 2 different atlases while I was in 4th or 5th standard and have had the habit of 'reading' through the names of places and wondering what lies in those places. I remember the name of one city particularly, Sofia, which intrigued me for weeks (I had a cousin named Sofia) to figure what and who lived there. I never found that out but I underlined whatever interested me and pretty much teared the whole book by the time I reached 8th standard.
Looking at Sibi, in a way, I am looking into myself.
இரண்டு படங்கள் - 2
விண்ணை தாண்டி வருவாயா
முழு நீள காதல் கதை. இரண்டு கதாபத்திரங்கள். Dialogue driven. இப்படி ஒரு படம் எடுக்கவும் கொஞ்சம் தைரியம் வேண்டி இருக்கிறது இன்றைய தமிழ் சுழலில். 'விண்ணை தாண்டி வருவாயா' ஒரு candy-floss காதல் கதை. கார்த்திக் - ஜெஸ்ஸியின் காதல் ஆரம்பித்ததில் இருந்து பிரிவு வரை. அவ்வளவே. Cinematic சீன்கள் உண்டு. காதல் பற்றி தமிழ் சினிமாவின் நம்பிக்கைகள் சிலவும் உண்டு. ஆனாலும் காதலின் சில கோணங்களை ரொம்ப வசனம் பேசாமல் எடுத்து வைக்கிறது. சில காட்சிகள் என்னை ஒரு 12 வருடங்கள் பின்னோக்கி இழுத்தன. மறக்க முடியாத சில நிகழ்வுகள், ஆறியதாய் மறந்து போன ரணங்கள், பிரிவின் துக்கம், கடைசி சந்திப்பு. சில விஷயங்கள் எல்லோருக்கும் பொதுவாய் இருப்பதுதான் சுவாரசியமே. அபத்தமாய் காதல் பற்றி வசனம் பேசாமல், கொஞ்சம் நக்கலுடன் காதலின் பைத்தியகாரதனத்தை காட்டியது, நாயகன் சபதம் போடுவது, எரிச்சலூட்டும் தோழி, தோழர்கள் கூட்டம் போன்ற காட்சிகள் இல்லாததாலேயே எனக்கு பிடித்தது.
சிம்பு , இது போல் இன்னும் சில படங்கள் கொடுத்தால் ரசிக்கலாம். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. த்ரிஷா aunty போல் இருக்கிறார். சீக்கிரம் அக்கா வேடங்களில் பார்க்கலாம். ரஹ்மான் தான் படத்தின் பலம்.
அடுத்து 'அங்காடி தெரு' பார்க்க வேண்டும்.
இரண்டு படங்கள் - 1
ஆயிரத்தில் ஒருவன்
'ஆயிரத்தில் ஒருவன்' வெளிவந்து 3 மாதங்கள் ஆகின்றது.அனால் நான் இப்போதுதான் பார்த்தேன். செல்வராகவனின் கதாநாயகர்கள் எப்போதும் விளிம்பு நிலை மனிதர்களே. அவர்கள் பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. ஒரு போரட்டத்திற்கு பிறகு ஒன்று தோற்று ஓடுவார்கள் இல்லை அவர்களின் வெற்றி ஒரு pyrrhic வெற்றியாக இருக்கும். 'ஆயிரத்தில் ஒருவன்' விதிவிலக்கல்ல. நாயகன் இறுதியில் உயிர் பிழைக்க தப்பி ஓடுகிறான். சோழ பாண்டியர்களின் விரோதம் இறுதி வரை இருந்தாலும், இதை ஒரு fantasy movie ஆகவே எடுத்து கொள்ள வேண்டியுள்ளது. ரீமா சென்னின் இறுதி வெற்றி, ஒரு பிண குவியலின் மேல் வருகிறது. வரலாறு பற்றிய சிந்தனயை மறுத்துவிட்டால் நல்லதொரு படமாக வரவேண்டியது. பாடல்கள், சண்டை என சில பல குழப்பங்களுடன் முடிந்து விடுகிறது.
What should've been a magnum opus of Selva's career peter out with Reema sen speaking chaste Tamil (this one factor made watching the second half of the movie miserable for me) and Andrea looking lost in the jungle. Karthi, though understated in the later part of the movie (no doubt, because of Parthiban's presence) carries it with the rustic charm of the 'kuppam' boy. Its kind of a sad ending with a sliver of hope but I would've preferred that the entire thing crashed down in the reality of the vengeance taken. Shiva makes his appearance throughout the movie to remind us of the destruction that is to follow. It was technically good movie though the CGI stands like a mole on the screen. Overall, a welcome effort in the midst of so many nonsensical movies.
With malice towards none
I, for one, was never enamored by the country or its wealth. In fact, the first thing I noticed on that very cold first day when I walked to office 12 years back. in the streets of Omaha, Nebraska was a completely drunk Sioux Indian on the pavement. Then, I noticed them regularly on my way to office or when I go out for lunch, always drunk and evoking pity. I discussed it with some of my colleagues in office. I was either advised to mind my own or some sort of 'tut-tut'ing. Then when we drove to the unfinished, Crazy horse monument in the Black hills, I started to understand some part of the history of the region.
It was another day when I drove back from Philadelphia when I stopped at Gettysburg. It was full of greenery and it was hard to believe that it was the place of a great battle. I couldn't remember any of the details of the battle but was overwhelmed by the number of deaths the place has seen.
For all its loftiness of ideals and belief in 'manifest destiny', the country never did realize it till that tall man came through. He not only did manage to rouse the inner morality of human being, he had the perseverance to see it through the end and was able to pay it with his life. It was a simple tale that has been repeated with different people in different eras with almost the same tragic end.
What moves me in this tale is that it is a great lesson in humanity for us to realize that he did all this with a view to accommodate anyone who was willing to cross-over, even with not the purest of intentions. As he himself said, he lived 'with malice towards none' and it is an impossible ideal to live up to.
I often remind myself of this and try to think of my life in terms of these values and often I come short. On that day, when I stood on those steps looking up to his Zeus-like countenance, I also realized that it took another 100 years of relentless pursuing of the same ideals to achieve what he really wanted to achieve. On that same steps, 100 years after his death, stood another great man who talked about having a dream and died for the same cause.
Irrespective of the color of the skin or the language spoken or the country where one was born, his story tells me that there are some ideals that are common to humanity and it is worth one's while to fight for it and even die for it.
The Discovery and Conquest of Peru - Zarate.
பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...
-
முள்ளால் எழுதிய ஓலை by உ.வே.சாமிநாதையர் My rating: 5 of 5 stars தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களின் 'என் சரித்திரம்' எ...
-
எம்.ஆர். ராதாவின் சிறைச்சாலை நினைவுகள் படித்தேன். விந்தன் தினமணி கதிரில் எழுதியது. விந்தனின் கதைகள் படித்திருக்கிறேன். முழுக்கவும் உரையா...
-
ஆலங்கோட்டு லீலா கிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய இந்த புத்தகம் சந்தியா பதிப்பகத்தின் மூலம் மொழி பெயர்த்து கிடைக்கிறது. இந்த வருட புத்தக கா...