இரண்டு படங்கள் - 2

படம் - 2
விண்ணை தாண்டி வருவாயா

முழு நீள காதல் கதை. இரண்டு கதாபத்திரங்கள். Dialogue driven. இப்படி ஒரு படம் எடுக்கவும் கொஞ்சம் தைரியம் வேண்டி இருக்கிறது இன்றைய தமிழ் சுழலில். 'விண்ணை தாண்டி வருவாயா' ஒரு candy-floss காதல் கதை. கார்த்திக் - ஜெஸ்ஸியின் காதல் ஆரம்பித்ததில் இருந்து பிரிவு வரை. அவ்வளவே. Cinematic சீன்கள் உண்டு. காதல் பற்றி தமிழ் சினிமாவின் நம்பிக்கைகள் சிலவும் உண்டு. ஆனாலும் காதலின் சில கோணங்களை ரொம்ப வசனம் பேசாமல் எடுத்து வைக்கிறது. சில காட்சிகள் என்னை ஒரு 12 வருடங்கள் பின்னோக்கி இழுத்தன. மறக்க முடியாத சில நிகழ்வுகள், ஆறியதாய் மறந்து போன ரணங்கள், பிரிவின் துக்கம், கடைசி சந்திப்பு. சில விஷயங்கள் எல்லோருக்கும் பொதுவாய் இருப்பதுதான் சுவாரசியமே. அபத்தமாய் காதல் பற்றி வசனம் பேசாமல், கொஞ்சம் நக்கலுடன் காதலின் பைத்தியகாரதனத்தை காட்டியது, நாயகன் சபதம் போடுவது, எரிச்சலூட்டும் தோழி, தோழர்கள் கூட்டம் போன்ற காட்சிகள் இல்லாததாலேயே எனக்கு பிடித்தது.
சிம்பு , இது போல் இன்னும் சில படங்கள் கொடுத்தால் ரசிக்கலாம். ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை. த்ரிஷா aunty போல் இருக்கிறார். சீக்கிரம் அக்கா வேடங்களில் பார்க்கலாம். ரஹ்மான் தான் படத்தின் பலம்.

அடுத்து 'அங்காடி தெரு' பார்க்க வேண்டும்.

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...