செஞ்சி கோட்டையும் திருமலையும் - 1



ஒரு கல்யாணத்திற்காக திருவண்ணாமலை செல்ல முடிவானபோதே இந்த முறை திருமலை சென்று குந்தவை ஜீனோலயத்தை பார்த்து விடுவது என்று முடிவெடுத்தேன்.

அதற்க்கு முன் ஒரு முறை செஞ்சி கோட்டை சென்று விடுவது என்றும் முடிவெடுத்தோம். பல முறை திருவண்ணாமலை சென்றிருந்தாலும் செஞ்சி சென்றதில்லை. திருவண்ணமலையில் இருந்து செஞ்சி செல்லும் ரோடு மிக மோசமாக இருந்தது. 38 கிலோ மீட்டர்கள் என்றாலும் ஒரு மணி நேரம் எடுத்தது. ராஜா கோட்டை சென்றோம்.

வழக்கமாக எல்லா பாரம்பரிய இடங்களிலும் நிகழ்வதை போலவே இங்கும் சுவர்கள் எல்லாம் தங்கள் பெயரை பொறித்து வரலாற்றில் வாழ முயன்றிருகிறார்கள் நம் இளைஞர்கள்.

அதையும் மீறி கோட்டையும் விஸ்தாரம் பிரமிக்க வைத்தது. பல இடங்கள் வெறும் சிதிலங்களாக மட்டுமே இருக்கின்றன. அதற்க்கு காரணம் நம் அலட்சியமா அல்லது அவை சிதிலமாக்க பட்டவையா என்று ஒரு குறிப்பும் இல்லை.

மலை கோட்டையின் மேல் சிபி மட்டும் எங்கள் நண்பர்களுடன் ஏற நாங்கள் கீழே காற்று வாங்க அமர்ந்து விட்டோம்.

உட்புறம் இருக்கும் வேணு கோபால கோயில் வெறும் சிதிலமாக இருக்க ஒரு சிதைந்த சிற்பம் மட்டுமே உள்ளது. வெளியில் இருக்கும் ராமர் கோயில் சற்று பரவாயில்லாமல் இருக்கிறது.






அங்கே மதிய உணவருந்திவிட்டு, ராணி கோட்டையை பார்காமலே திரும்பி விட்டோம்.

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...