உன் பிரியத்தின் பொருட்டு

உன் பிரியத்தின்
பொருட்டே
என் வாழ்வு
முழுமை பெறுகிறது.

இழந்த நாட்களில்
தொலைந்த சந்தோசங்களில்
மனதில் அமிழ்ந்தது
உன் நினைவு.

கரைந்த கணங்களில்
நெகிழ்ந்த மனதில்
சிறு தளிராய் உன் புன்னகை.

கண்ணில் வழியும் நீராய்
உயிரின் வலியாய் நீ.

மனதின் காதலில்
எரியும் காமத்தில்
உன் பார்வையின் வெளிச்சத்தில்
என் வாழ்வு நகர்கிறது.

உன் பிரியத்தின்
பொருட்டாய் மட்டும்...

13/11/16

No comments:

கீழடி அருங்காட்சியகம்.

உலகம் முழுவதும் இருக்கும் பல அருங்காட்சியகங்களுக்கு சென்றிருக்கிறேன். நியூ யார்க், கத்தார், துபாய், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களின...