Showing posts with label தி.ஜா. Show all posts
Showing posts with label தி.ஜா. Show all posts

உயிர்த்தேன்

உயிர்த்தேன் உயிர்த்தேன் by T.Janakiraman
My rating: 3 of 5 stars

'உயிர்த்தேன்'. தி.ஜாவை படிப்பதற்கும் ஒரு நேரம் தேவைப்படுகிறது. சென்னை 4 நாட்களாக மழையின் வெள்ளத்தில் தத்தளித்த போது வீட்டில் மின்சாரம், கைபேசி எதுவும் இன்றி வெறும் மெழுகுவர்த்தி துணையுடனும், நிற்காமல் மழையை பார்த்து ஊழிக் கால மழை எல்லாம் நினைவில் வர இருந்த நாட்களில் ஒன்றில் ஒரு மெழுகுவர்த்தி துணையுடன் படிக்க ஆரம்பித்தேன்.

தி.ஜாவின் பலமே அவரது உரையாடல்கள்தான். இதுவும் அது போலவே உள்ளது. செங்கம்மாவின் கதையாகவே போகும் இந்த நாவல் தி.ஜாவின் சிறந்த நாவல்களில் ஒன்று அல்ல. நாவலின் கதாபாத்திரங்கள், குறிப்பாக செங்கம்மாவும் அனுசூயாவும் கொஞ்சமும் யதார்த்த தன்மை இல்லாமல் இருக்கிறது ஓரு காரணம். அது போலவே கதையின் பல நிகழ்வுகள் சற்று நாடகத்தன்மையுடன் இருப்பதுமே.

பூவராகன் பட்டணத்தில் இருந்து ஆறுகட்டி கிராமத்தில் பூர்வீக நிலங்களை பார்த்து கொள்ள வருகிறார். அவரின் கணக்க பிள்ளை கணேசன் மற்றும் அவரது மனைவி செங்கம்மா சமையல்காரியாக அவரின் வீட்டில் இருக்கின்றனர். ஆறுகட்டியில் பூவிற்கு முன்னர் மிராசாக இருந்த பழனி காரணம் தெரியாத வன்மம் பாராட்டுகிறான். என்ன நடக்கிறது என்பதே கதை.

தி.ஜா காட்டும் அந்த 60களின் உலகம் அதன் பல மாய்மாலங்களுடன் நம்மை மயக்குகிறது.அது ஒன்றே இந்த கதையை காப்பாற்றுகிறது எனலாம். அனுசூயா யார் அவளுக்கும் பூவிற்கும் எப்படி பழக்கம் போன்ற சிறு தகவல்கள் அங்கும் இங்குமாக இல்லாமல் இருப்பதால் அனுசூயாவே ஒரு ஆதர்ச பெண் கதாபாத்திரமாக கதையின் ஓட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியாக ஆகி விடுகிறாள்.

அந்த ஆதர்ச நிலையே கதையின் பலமும் பலவீனமும் எனலாம். அதுவே கதையுடன் ஒன்றமுடியாமல் செய்து விடுகிறது. ஆனாலும் தி.ஜாவின் சில உரையாடல்கள் புன்முறுவலை வரத்தான் செய்கின்றன.

"ரொம்ப ஜாக்ரதையாகதான் இருக்கிறேன். இந்த தேசத்திலேயே ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும். ' வயசு வந்த மகளா இருந்தா அதோட தனியா இருக்காதே'னு நீதி சாஸ்திரம் எழுதி வச்சிருக்கிற புண்ணிய தேசமாச்சே இது. ராவணன் சீதையைத் தூக்கிட்டு போறப்ப, சீதை ஒரு பக்க ஆபரணங்களெல்லாம் கழட்டி போட்டா, வானரங்க மத்தியில விழுந்தது அது. பின்னாலே, ராமனும் லக்ஷ்மணனும் வந்தப்ப, லக்ஷ்மணன் சொன்னனாம் 'எனக்கு காது கை தெரியாது, மூக்கு நகை தெரியாது, கை நகை தெரியாது, கால் கொலுசுதான் தெரியும்'னு, கற்புக்கனல்,அருள் வீசுது முகம் - அதை பார்க்கவே கூசினானாம் இவன். அவ்வளவு சுத்தாத்மா! ராமாயணம் எழுதின மகானா இந்த அசிங்கத்தை எழுதுவான்! பின்னால் வந்த நாட்டமைகாரன் எவனோ அப்படி சாமர்த்தியமா செருகியிருக்கிறான். ஆகா ஆகா எப்பேர்ப்பட்டவன், எப்பேர்ப்பட்டவன்னு எத்தனை ஆடுங்க தலையாடிக்கிட்டே வருது அன்னியெ பிடிச்சு! சீதைய அசோக வனத்தில இருந்து பல்லக்கிலே ஏத்திக்கிட்டு வரப்ப, 'எல்லோரும் பாக்கட்டும், திரையை விலக்குங்கடா'ன்னு ராமப் பிரபு உலகத்துக்கு அந்த அருளைப் பளிச்சுன்னு திறந்து காமிச்சான். லக்ஷ்மணன் கால் நகைதான் தெரியும்னு சொன்னானாம். அத்தனை அயோக்கியனா அவனைப் பண்ணனும்னு தோணிச்சே பின்னால வந்த நாட்டமைக்காரங்களுக்கு! எப்பேர்பட்ட புண்ணிய பூமி! என்ன பண்பாடு "ப்ராய்ட்" எல்லாம் தோத்து போகணும். நான் ஜாக்கிரதையாத்தான் இருக்கேன். பயப்படாதே" .....
"என்ன இத்தனை ஆவேசம் வந்தது உனக்கு? ராமாயணத்து மடியிலேயே கை போட்டுட்டியே!"
"நான் போடலே, நாமெல்லாம் கெட்டு போயிடப்படாதுன்னு கண்ணில விளக்கெண்ணையைப் போட்டுக்கிட்டு கவலைப்பட்டு புதுசு புதுசா சேர்க்கராங்களே , அவங்களை சொன்னேன் சிங்கு"


இதை படிக்கும் போது இப்போது உயிரோடு இருந்திருந்தால் தி.ஜா என்ன பாடு பட்டிருப்பார் என்று தோன்றாமல் இல்லை.


View all my reviews

செம்பருத்தி

தொடர்ச்சியாக படித்துக் கொண்டிருக்கும் போது வெயில் நாளின் உச்சி மேகமாய் எங்கிருந்தோ ஒரு புத்தகம் சட்டென்று நெஞ்சின் ஒரு கிளையில் ஊஞ்சல் கட்டிக் கொள்ளும். வெறும் கதையாக மட்டும் இல்லாமல் மனதின் உறைந்திருந்த உணர்வுகளின் நாதமாய் இன்னமும் மிச்சமிருக்கும் சில மெல்லிய உணர்வுகளை தொட்டெலுப்பிவிட்டு செல்லும்.

'மோக முள்' அது போன்றதொரு கதை. அதை படித்த வேகத்தில் 'அம்மா வந்தாள்', 'உயிர் தேன்' என வரிசையாக தி.ஜாவை தேடி படித்ததுண்டு. ஆனால் 'மோக முள்'ளின் வலியை பின் வந்த எதுவும் கொடுக்கவில்லை. அதே நினைவோடுதான் 'செம்பருத்தி'யை ஆரம்பித்தேன்.

1930-40களின்  தஞ்சை மாவட்ட கிராமம் ஆனாலும் மனிதர்கள் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் அப்படியேதானே இருக்கிறார்கள். மூன்று சகோதரர்கள். கால ஓட்டத்தில் அவர்கள் வாழ்வின் மாற்றங்கள் என்றும் சொல்லலாம். ஒரு மனிதனின் வாழ்வின் காதல்களின் கதையாகவும் கொள்ளலாம். அனால் என்னை பொறுத்தவரை மனிதர்களின் வீழ்ச்சியும் எழுதலுமாகவே பார்க்க முடிந்தது.

சட்டநாதனின் 27, 42 மற்றும் 60 வயதினில் நடக்கும் நிகழ்வுகள் மூன்று பாகங்களாக விரிகிறது. சட்டநாதனின் கதையாக தெரிந்தாலும் குஞ்சம்மாள், புவனா மற்றும் பெரிய அண்ணி என மூன்று பெண்களும் மட்டுமே கதையின் ஆணி வேராக நடத்துகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகள், அந்த எதிர்பார்ப்புகள் கொண்டு வரும் ஏமாற்றங்கள் மட்டுமே கதையாக இருக்கிறது. ஒரு விதத்தில் நம் எல்லோரின் கதையுமே அதுதானே. நம் வாழ்வே இந்த முரண்பாடுகளின் கூடாகத்தனே செல்கிறது.

முரண்பாடு என்பது வெறும் ஆசைக்கும் நிராசைக்கும் மட்டும் நிகழ்வதில்லை. மனதின் இச்சைகளுக்கும் சமூகத்தின் கட்டுகளுக்குமான முரண்பாடுகளும் நம்மை அலைக்களிக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்குமான இந்த போராட்டமே இன்றும் வாழ்வை வாழ வைக்கிறது.

'செம்பருத்தி' இந்த மன விகாரங்களையும் அவற்றுடன்னான போராட்டங்களையும் பேசுகிறது. எல்லோரும் கொஞ்சம் நல்லவர்களாகவும், கொஞ்சம் மன விகாரங்களுடனும் வலம் வருகின்றனர். வீட்டிருக்குல்லேயே இருப்பதாய் தோன்றும் பெண்கள் எல்லோரையும் ஆட்டுவிக்கிறார்கள்.

'மோக முள்'ளின் யமுனாவை போன்று மனதை உருக்கும் பெண் பாத்திரங்கள் பல படித்ததில்லை. 'செம்பருத்தி'யில் புவனா மனதை உருக்காவிடினும் ஒரு ஆதர்ச பெண்ணாக வலம் வருகிறாள். புவனாவை படிக்கும் போதெல்லாம் என் மனைவியை நினைவு படுத்தாமலில்லை. அதுவே நான் எவ்வளவு அதிர்ஷ்டக்காரன் என்றும் நினைவு படுத்திக் கொண்டே இருந்தது. புவனாவின் காதலே சட்டநாதனின் வாழ்க்கையாகிறது. 

"எது நடந்தாலும் பெருசா என்னமோ அவமானம், கௌரவ குறைச்சல் நடந்திட்டாப்பல  பாராட்டிக்கிட்டே உட்கார்ந்து இருக்காமெ, பெருந்தன்மையா மன்னிச்சிட்டு நம்ம பிரியம்தான் பெருசுன்னு போய்ட்டிருக்கணும். எது வந்தாலும் எங்களை பிரிக்க முடியாதுன்னு ஒட்டி தைச்சு போட்டாப்புல பிடிச்சுகிட்டு நிக்கணும். அது இல்லாட்டி ஒன்னும் சுகமில்லே."

கதையின் ஆரம்பத்தில் ஆண்டாள் சொல்லும் இந்த அறிவுரையே மொத்த கதையின் அடிநாதம். ஒரு விதத்தில் சட்டநாதனும் புவனாவும் அது போன்று வாழ முனைவதே கதை. இதன் இடையே குஞ்சம்மாளுடன் கொண்டிருந்த காதல் ஏற்படுத்தும் குழப்பங்களும் புவனாவும் சட்டமும் அதை எப்படி எதிர் கொள்கிறரர்கள் என்பதுவும் மனதை வருடும் விதமாய் செல்கிறது.

தி.ஜா பெண்களின் உலகை விவரிப்பதில் இணை இல்லாதவர். இன்றைய பெண்ணிய உலகை அதன் உள் நுணுக்கங்களுடன் புரிந்து எழுதுபவர் யாரும் இல்லை என்பதே தி.ஜாவின் நுண்ணிய அவதானிப்புகளை சொல்லிவிடும். 
பெண்கள் இல்லாத ஒரு உலகம் சித்தித்தாலும் அது வெறும் வறண்ட பாலைவனமாகவே இருக்கும் என்பதை நுணுக்கமாக உணர்துவதிலே இருக்கிறது தி.ஜாவின் எழுத்து.

இது எல்லாவற்றையும் தாண்டி மெல்லிய சிறகை வாழ்வை விவரணை செய்வதில் தி.ஜா மனதை தொட்டுவிடுகிறார். 

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...