அம்மாவின் வீடு - மீள் பதிவு

(2013) சில மாதங்களுக்கு முன் அம்மாவின் சிவகாசி வீடு விற்கப்பட்டது. அன்று காலை அம்மா பத்திர பதிவுக்கு சென்று விட்டு வந்தார். சிவகாசியுடன் இருந்த கடைசி தொடர்பும் விட்டது.

எனக்கு  முதல் நினைவு அந்த வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. என் தம்பி பிறந்த பொழுது என் அம்மா அங்கே இருந்தார். எனக்கு ஒரு நான்கு வயது இருக்கும். இரவில் சரியாக தூங்காமல் இருப்பேன். அப்போது  என் மாம்பா (அம்மாவின் அப்பா) என்னை தூக்கி கொண்டு தெருமுக்கில் இருந்த குழாயடியில் உக்கார்ந்து இருப்பார். இரவின் நிசப்தம், ஆள் நடமாட்டம் இல்லாத தெற்கு ரத வீதி இன்றும் நினைவில் இருக்கிறது.

என் அம்மாவின் வீடு அந்த தெருவின் உள்ளே ஒரு சிறு சந்தில் இருந்தது. மொத்தம் ஒரு பத்து வீடுகள் இருக்கும். கடைசி வீட்டுக்கு முந்தைய வீடு என் அம்மாவின் வீடு. கடைசி வீடு அம்மாவின் சித்தப்பாவின் வீடு. என் அம்மாவின் பாட்டி வீடும் அதில்தான் இருந்தது. எல்லா விடுமுறைக்கும் அங்கு சென்று விடுவோம். நிறைய சந்தோஷமான நாட்கள். சில கஷ்டமான நாட்களின் நினைவுகளுடன் விற்கப்பட்டுவிட்டது.

25 வருடங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைகள் எல்லாம் சிவகாசி தெற்கு ரத வீதியில் இருந்த என் மாம்பா (அம்மாவின் அப்பா) வீட்டில்தான் கழியும். பகல்கள் எல்லாம் பட்டாசு கட்டு ஒட்டவும், சில சமயம் தீப்பட்டித் தாள் ஓட்டுவதிலும் ஓடும். பகல் காட்சி 'ஒலிம்பிக்' சினிமாவிலும், 'பழனியாண்டவர்' பெஞ்சுகளிலும் சிவாஜி, எம்.ஜி.யார் படங்கள் பார்ப்பதும், தேர் இழுப்பது, பத்ர காளி அம்மன் கோவிலுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வேப்பிலை கட்டி போவதும், கோவிலில் குவிந்து கிடக்கும் வேப்பிலையில் உருண்டு விளையாடுவதுமாக விடுமுறை கழியும். 
"ஆஹோய் அல்லாஹோய் 
ஆத்தாத்தா பெரியாத்தா 
அம்பது பிள்ளை பெத்தாத்தா 
உனக்கு நாலு 
எனக்கு நாலு போடாத்தா 
ஆஹோய் அல்லாஹோய் 
ஆத்தாத்தா பெரியாத்தா 
கறியும் சோறும் போடாத்தா "
என்று பாட்டுப் பாட போவதற்கு முன் கரிக்கட்டையையும், சுண்ணாம்புவையும் உரசி மேலெங்கும் கரும் புள்ளி செம்புள்ளி குத்தியது அந்த வீட்டின் குளியலறையில்தான். 

பக்கத்து வீட்டு பரமேஸ்வரியக்காவின் பிள்ளைகளுடன் சிறு வயதில் இருந்து சிநேகிதம் கொண்டதும், இரவு பகலாய் தாயம், trade, பரமபதம் விளையாண்டதும் இந்த வீட்டில் இருந்த போதுதான். இரவு முழுவதும் விழித்து இருந்து சூரன் குத்து பார்த்தது, விழித்து இருப்பதற்காக விடிய விடிய தாயம் விளையாடுவது என்று பொழுது போகும். 

குமார் அண்ணாச்சியுடன் மாடியில் புரிந்தும் புரியாமலும் வானியலும், இந்து ஆன்மீகமுமாக ஒருவாறு கலந்து கட்டி எனது புத்தக தேடல்கள் ஆரம்பித்ததும் இங்கிருந்துதான்.

வீடு ஒரு பெரிய ஹாலும், மிகச் சிறிய சமையலறையும், இன்னொரு பெரிய குளியலறையும் மட்டுமே கொண்டது. வீட்டின் ஊடே படிக்கட்டுகள் வழியாக மாடியில் ஒரு பெரிய ஹால். சிறு மொட்டை மாடி, என்றுமே தண்ணி இல்லாத ஒரு சிறு தொட்டி, அந்த தொட்டியில் இருந்து பக்கத்துக்கு கழிப்பறைக்கு ஒரு குழாய். 
அந்த தொட்டியின் உள்ளே உட்கார்ந்து கொண்டு சாயங்கால சூரியனையும் ஓட்டு வீடுகளையும் பல நாட்கள் பார்த்து இருந்திருக்கிறேன். 

என் மாம்பா ஒரு பழைய காங்கிரஸ்காரர் ஆதலால் எப்போதும் கதர்தான் கட்டுவார். அதை வெளுப்பதற்கு ஒரு வண்ணான் வீடிற்கு வருவார். அந்த நாள் ஒரு ஓரத்தில் இருக்கும் அழுக்கு பெட்டி திறக்கப் படும். நானும் தம்பியும் குவிந்து கிடக்கும் ஆளுக்கு துணிகளில் விளையாடுவோம். 'சின்ன முதலாளி' என்று வண்ணான் கூப்பிடும்போது தலையில் கொஞ்சம் போதை ஏறி கிறுகிறுக்கும். தோட்டி சுந்தரம் குளியலறை வாசல் வழியாக வந்து சுத்தம் செய்துவிட்டு ஒரு அலுமினிய தூக்கில் என் மாம்மை தரும் பழைய சோற்றை வாங்கிக் கொண்டு போகும். 

சிவகாசி வீட்டில் ஒரு நாள் என்பது காலையில் என் மாம்பாவுடன் உடுப்பி ஹோட்டலுக்கு செல்லுவதில் தொடங்கும். தம்பி கேசரியும், நான் வேறு எதாவது பண்டமும் சாப்பிட்டுவிட்டு, அன்றைய செய்தி தாள்களை வாங்கிவிட்டு திரும்புவதில் ஆரம்பிக்கும். 'தினத்தந்தி' 'தினமலர்' என விற்பனையில் இருக்கும் அனைத்து செய்தி தாள்களும் வாங்குவார். வீட்டிற்க்கு வந்து காலை சாப்பாடு, குளியல் முடித்து விட்டால் பிறகு முழுவதும் ஆட்டம்தான். 10-11 மணி வாக்கில் மாம்பா வெள்ளை வேஷ்டி, வெள்ளை கதர் சட்டையுடன் வெளியே கிளம்புவார். 
கட்டு ஓட்டுவது, விளையாடுவது போன்று சில மணி நேரம் கழியும். மதிய சாப்பாடு. மாம்பா 2-3 மணி போல் வீடு திரும்புவார். சாப்பிட்டு, ஒரு மணி நேரம் தூங்குவார்.

திரும்பவும் 4 மணிவாக்கில் மாம்பா வெளியே கிளம்புவார். இந்த முறை நானும் என் தம்பியும் கூடவே கிளம்புவோம். 


புல் மார்கெட் வழியே நடந்து சிவன் கோயில் எதிரே இருந்த மூப்பனார் கடையில் ஒரு லைம் சோடா. அங்கிருந்து அப்படியே நடந்து பெரிய தேரடியில் இருக்கும் வேலாயுத நாடார் கடைக்கு பக்கத்தில் இருக்கும் 'பாண்டியன் ஐஸ் லேன்ட்'ல் ஒரு ஜூஸ். அப்புறம் வேலாயுத நாடார் கடையில் கொஞ்சம் தின்பண்டம். அங்கே இருக்கும் புத்தக கடையில் அன்று வந்து இருக்கும் எல்லா புத்தகங்களும் வாங்குவார். நானும் எதாவது காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குவேன். 

அங்கிருந்து நானும் தம்பியும் வீடு திரும்பி விடுவோம். நீண்ட நாட்கள் என் மாம்பா என்ன வேலை செய்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது. எந்நேரமும் கையில் ஒரு gold flake புகைந்து கொண்டிருக்கும். கேரளாவிற்கு 10 நாள், கர்நாடகாவுக்கு 10 நாள் என எங்காவது போய் கொண்டே இருப்பார். பல முறை போகும் வழியில் மதுரையில் என்னையும் கூட்டிக் கொள்வார்.

சாயங்கால வேளைகளில் பல நாட்கள் மின்சாரம் இருக்காது. வீட்டு வாசலில் ஒரு அரிக்கேன் விளக்குடன் உக்கார்ந்து பல கதைகள் பேசிக் கொண்டிருப்போம். இருட்டிலேயே சாப்பிட்டு விட்டு பல நாட்கள் தூங்கிவிடுவோம். மாம்பா சில இரவுகளில் அவரின் இள வயது கதைகளை சொல்ல கேட்டிருக்கிறேன். யார் உதவியும் இன்றி முன்னேறியவர். 

அந்த வீட்டின் மாடியில் இருக்கும் ஹாலில் நானும் தம்பியும் பல நாட்கள் ஒரு கயிறைக் கட்டி டென்னிஸ் விளையாடி இருக்கிறோம். அங்கே கட்டி வைக்க பட்டிருக்கும் சாக்கு பைகளில் இருக்கும் பல மாத புத்தகங்களில் சுஜாதாவையும், கல்கியையும் வாசித்துப் பழகி இருக்கிறேன்.

அங்கே இருந்த ஒரு அலமாரியில் என் அம்மா B.A படித்ததின் எச்சமாய் கிடைத்த புத்தகங்களில்தான் எலியட்டும், அந்தோணி ஹோபும் , டுமாஸ்சும் அறிமுகமானார்கள். அங்கிருந்த மணியனின் 'அமெரிக்க பயண நினைவுகள்'தான் மதுரையை தாண்டியும் ஒரு உலகம் உள்ளது என்று காட்டியது.

அம்மாவின் தாத்தாவின் திதியில் வீடியோ டெக் எடுத்து விடிய விடிய படம் பார்ப்பது. வீடு நிறைய அம்மாவின் அத்தைகளும், சித்திகளும், மாமாக்களும் அவர்களின் பிள்ளைகளுமாய் நிரம்பி வழியும் நாட்கள். மனோன்மணி அக்காவின் (என் அம்மாவின் அத்தை) உரத்த சிரிப்பும், இடைவிடாத நக்கலும், அம்மாவின் பதில்களுமாய் ஒரு சந்தோசமான உலகமாய் இருந்தது.

அம்மாவின் பாட்டி, ராசம்மாக்கா வீடு , இரண்டு வீடு தள்ளி இருக்கும். விறகடுப்பில் கருப்பட்டி காபி குடிக்கவே அங்கு சாயங்காலம் போவது, செம்பகவல்லி அக்கா ஏதாவது வேலை சொன்னால் ஓடுவது என பொழுது போகும்.

பழனி சென்ற போது மாரடைத்து என் மாம்பா இறந்து வந்த பொழுது அந்த வீட்டின் சந்தோசங்கள் எல்லாம் வடிந்தது. வீட்டின் நடுவே பிணமாய் பார்த்த அன்று வாழ்க்கையில் என்னை விழாது பிடிப்பார் என்று நினைத்திருந்தவர் போன துக்கம் தொண்டையில் நின்றது. 
என் வாழ்வின் மிகப் பெரும் வருத்தங்களுள் ஒன்று, அவர் நான் படித்து முடித்ததையோ , பின் வாழ்வின் பயணங்களையோ பார்க்கவில்லை என்பதே.

அந்த 12ம் வகுப்பு விடுமுறையும் அங்கேதான் கழிந்தது. கொஞ்சமும் சந்தோஷமில்லாத, என் மாம்மையின் தனிமையை மட்டுமே பார்த்த நாட்கள். அதன் பின் மாடி மட்டும் வாடகைக்கு விடப்பட்டு அந்த வீடு துண்டுகளாய் சிதைந்து போனது. 6 வருடங்களுக்கு முன் மாம்மையும் இறந்த பிறகு, மாமாவின் பிள்ளைகளுக்காய் விற்கப் பட்டு நினைவுகள் மட்டுமே மிச்சமாய், அந்த வீட்டின் உடனான கடைசி சரடும் விட்டுப் போனது.

When Breath Becomes Air

When Breath Becomes Air When Breath Becomes Air by Paul Kalanithi
My rating: 5 of 5 stars

I do not go out and read really sad books or books I know will end in a tragedy. However, it took me about 2 hours to read this one - sitting in a bookstore.
To say that this is a profoundly moving book is an understatement. It is difficult to pick this book up and read through it without going through a gamut of emotions.
I read about Paul Kalanithi in a NY times magazine essay. I felt bad for him but then thought not much about it. So when I saw this book in the shelf in Odyssey(Adyar), I felt a little curious and started reading the preface. I got hooked and got up after finishing the book.
The book needs you to emotionally invest in another person's life as though he was someone near to you. You read it and you feel the ebb and flow of his emotions going through the diagnosis, prognosis and slowly slipping into the other world.
Paul starts with his life in the desert hinterland of Arizona and those were the chapters which interests and you cheer for the little guy who runs around catching scorpions, telling tall tales to Berliners - a normal boy in his teens with an interest in books and literature.
Then it quickly moves through his time in Stanford and his time in the hospital working with many doctors and his approach towards the patients. Then he falls ill and is diagnosed with cancer.
Having gone through some of those whirlwind of emotions personally and with a few friends, it is not very difficult to think of his handling of the same. The uncertainty, the slim hope of a miracle somehow, the agony of waiting for the test results, the anticipation and negation of having to meet the doctor and hear what he/she is going to say are all deeply personal and terrifying at the same time.
Paul, for most of his part, is very brave to confront what is happening in his life and taking charge of it. However, I couldn't stop thinking of those sleepless nights he must've had with excruciating pain and fear which he never recorded. It is difficult to understand the gaps in the narrative without a gut-wrenching feeling of what it must've been like.
The lyrical prose - a result, I believe, of his being a student of literature for long, conveys what he says and what he lefts out as well. In places where he quotes T.S. Eliot and his own thoughts on mortality and God are places you want to read again and again. They tell you something about the brilliant mind that worked behind the malady itself.
It is more painful to know that he wouldn't be writing anymore. He talks about spending 20 years of his life to writing. He ended up with spending less than 2.
It is also difficult to come out of reading the book without realizing how fickle our lives are and be not ashamed of all the vanities that drives us.
An amazing read..indeed..

View all my reviews

Review: The Course of Love: A Novel

The Course of Love: A Novel The Course of Love: A Novel by Alain de Botton
My rating: 5 of 5 stars

Alain de Botton's 'On Love' is a book I read long back which helped in, if not understanding, but figure the underlying elements of Love. So, it was with a lot of anticipation that I picked up 'The Course of Love' and it did not disappoint.

A major part of our lives are spent trying to find the right person to love and after which, the struggle starts to keep that person in our lives. The progression starts with an yearning for the right person and once found, the wooing and as per the most love stories of the world, the marriage. Somehow, marriage seems to be ultimate end point of this struggle.

de Batton starts his book at this point, the initial wooing part is minimal and the marriage happens swiftly. The major part of the book then goes through the struggle to keep the love life intact and the difficult phases which tests the limits of that love. It is an all together familiar story. How do you go past the petulant worries of the day and pass over the difficulties to have a successful marriage?

The story is a concoction of little incidents in the life of Rabih and Kirsten. de Batton keeps on deconstructing those events to come with the different phases and difficulties of love. Love is needed if one has to be happy. Happiness or anxiety or murderous rage is usually a by product of love or lack there of the same. So it is important to understand the reasons on how and why we lose love in the process of living the life.

The book will make a very good present for any marriage. It teaches some important lessons in terms of the challenges faced in a marriage - money, kids, the quirks of the person we married etc - and how that affects love. Some of the narration brought out a chuckle in me as I was able to relate the incidents with my life.

The last 2 chapters basically talks about the transformation in Rabih in understanding what Love is and how to derive happiness out of a marriage. It takes him about 16 years to get there and after numerous misunderstanding and an affair.

The book does not try to answer what love is or isn't. It helps to understand how to derive happiness out of a life which keeps throwing curve balls at you. That is a very good reason to read and cherish the book.

View all my reviews

கபாலி

1999இல் நான் முதல் முறையாக KL எனப்படும் கோலா லம்பூர் சென்றேன். KLஇன் புது விமான நிலையத்தில் என் கவனத்தை முதலில் ஈர்த்தது அங்கே , low skilled வேலைகள் என்று சொல்லப்படும் அனைத்திலும் தெரிந்த தமிழ் முகம்கள். துப்புரவு பணியாளர்கள், உணவகத்தில் சுத்தம் செய்பவர்கள் என எல்லோரும் தமிழர்கள். கல்லாவில் இருப்பவர், போலீஸ் போன்றவற்றில் தமிழ் முகங்கள் இல்லை.
அது வரை அமெரிக்காவில் இருப்பவர்களை விட மெத்த படித்த மேதாவிகளாய் அங்கு சென்று அமெரிக்கா பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் இந்தியர்களை பற்றி மட்டுமே தெரிந்திருந்த எனக்கு, இங்கே இன்னொரு அந்நிய நாட்டில், அமெரிக்காவில் இந்தியர்கள் , மெக்ஸிகோ மக்களை எப்படி நினைக்கிறோமோ அப்படியான ஒரு சூழலில் தமிழர்களை பார்த்தது கொஞ்சம் அதிர்ச்சியாகவே இருந்தது. அன்று அங்கு சுத்தம் செய்து கொண்டிருந்த 'அபிராமி' என்ற பெண்ணுடன் பேசினேன். கொஞ்சம் வித்தியாசமான தமிழில் 'தமிழ்நாட்டுக்கு வந்ததே இல்லை. சினிமா பாப்போம்' என்றெல்லாம் பேசினார். அங்கிருந்து ஒரு கார் எடுத்துக் கொண்டு KL சென்றேன்.
எனது காரோட்டி ஒரு சீனாகாரர். அருமையாக தமிழ் பேசினார். கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும் மலேசியாவின் பல பிரச்சினைகளையும் அதற்கு அரசு எடுத்து வரும் விஷயங்களையும் பற்றி பேசினார். தமிழர்களுக்கும் சீனர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை , மலாய்களின் விவகாரங்கள் மட்டுமே மலேசியாவின் பிரச்சினைகளுக்கு காரணம் என்றார். KL எனக்கு சென்னையை போன்றே தோன்றியது. அகலமான ரோடுகள், உயரமான கட்டிடங்களை எடுத்து விட்டால் KL இன்னொரு சென்னைதான். அதனாலேயே அங்கு திரும்ப திரும்ப சென்றேன்.
'நாடு விட்டு நாடு வந்து'. முத்தம்மாள் பழனிசாமியின் கதை மலேசியா தோட்ட தமிழர்களின் வாழ்வு கதையாக இருந்தது. அதற்குள் 'NEP ', 'பூமி புத்ரா' போன்றவற்றை பற்றி படித்து வைத்திருந்தேன். பினாங்கு, தண்ணீர் மலை போன்ற இடங்களுக்கு என்னை ஈர்த்தது இந்த கதைகளே.
'கபாலி' ஒரு ரஜினி படம். இத்தனை சமூக பிரச்சினைகளை கொண்டிருக்கும் மலேஷியா தமிழர்களை பற்றிய படம். ரஜினி இருப்பதால் அந்த பிரச்சினைகள் அங்கே இல்லாமல் போக போவதில்லை. ஆனால் இங்கிருக்கும் தமிழர்களுக்கு இப்படி ஒரு நாடும், அந்த நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளும் தெரிய வைப்பதில் , அந்த மாதிரியான ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்ததில் ரஜினி நிற்கிறார்.
நான் ரஜினி படங்களுக்கு விமர்சனங்கள் எழுதியதில்லை. ரஜினி ரசிகனாக இருந்தாலும், ரஜினியின் படங்கள் வெறும் வணிக கேளிக்கை படங்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் எனக்கு இருந்ததில்லை. அந்த கேளிக்கை கொண்டாட்டங்களுக்கு மட்டுமே நான் ரஜினியின் படங்களை பார்ப்பேன். எனவே, கபாலி ஒரு வித்தியாசமான படமாக தெரிகிறது. வெறும் கேளிக்கையாக இல்லமால் ஒரு மக்களின் பிரச்சினையை முன் வைக்கிறது. அந்த பிரச்சினைகளை புரிந்து கொள்வதில், குறைந்த பட்சம் அந்த மக்களின் வாழ்க்கை பிரச்சினைகளை வெளிக் கொணர்வதில் ஒரு முதலடி எடுத்து வைக்கிறது.
இந்த படத்தின் விமர்சனங்களில், படத்தின் வணிகம் எப்படி பல சிறு படங்களை பாதிக்கிறது, அதன் மூலமாக பாதிக்கப்படும் தொழிலாளிகள் என்பது ஒவ்வொரு ரஜினி பட வெளியீட்டின் போதும் வைக்க படுவதே. ஆனால் இந்த முறை இத்துடன் நம் தமிழ் தேசிய வாதிகள் சேர்ந்து கொண்டார்கள். இவர்களுக்கு என்ன பிரச்சினை என்று எனக்கு புரியவில்லை. ரஜினி தமிழன் இல்லை என்பது ஒன்று. மூன்று தலைமுறைகளாக இருந்தும் இன்றும் இரண்டாம் தர குடிமக்களை போல் நடத்தபடும் மலேஷியா தமிழ் மக்களுக்கு இது நன்றாகவே புரியும். கடல் கடந்து வாழும் தமிழர்களின் பிரச்சினைகளை பேசியதற்காக அவர்கள் சந்தோச படவேண்டும். இன்னொன்று ரஞ்சித்தின் அரசியல். சாதி அரசியலை ஆதரிப்பவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்டம்தான். வெறும் தட்டையான அரசியல் பிரச்சினைகள் புரிதலுடன் இருப்பவர்களுக்கும், உலகை 'கருப்பு/வெள்ளை' என பார்ப்பவர்களுக்கும் இன்னமும் கஷ்டமே.
இது போன்ற ஒரு விமர்சனத்தை ஒரு ரஜினி படத்திற்கு எழுதுவேன் என்று நானே நினைத்ததில்லை. அதற்கு ரஞ்சித்துக்கு நன்றி சொல்ல வேண்டும். ரஞ்சித் ஒரு சுவாரசியமான, கவனிக்க படவேண்டிய இயக்குனர் என்பதை மறுபடி நிரூபித்திருக்கிறார்.
மற்றபடி வெறும் கேளிக்கை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்காக ஷங்கர் தன் பாணியில் ஒன்றை எடுத்து வருகிறர். அது வரை, 'கபாலி' தந்த நல்லுணர்வு நிலைக்கும்.
மகிழ்ச்சி!

Review: ஒரு கூர்வாளின் நிழலில்

ஒரு கூர்வாளின் நிழலில் ஒரு கூர்வாளின் நிழலில் by தமிழினி
My rating: 5 of 5 stars

"ஒரு கூர்வாளின் நிழலில்" - விடுதலை புலிகள் இயக்கத்தில் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த தமிழினியின் சுயசரிதம். விடுதலை புலிகளின் இயக்கத்தில் தலைமை இருந்த எவரும் தங்கள் வரலாற்றை, போரின் நாட்களை பதிவு செய்து நான் படித்ததில்லை. எனவே, தமிழினியின் இந்த புத்தகம் முக்கியமானதாக இருக்கிறது.

1980இன் பிற்பகுதிகளில் எனது பள்ளி நாட்களில் இலங்கை ஒரு முக்கியமான இன பிரச்சினையாக விவாதிக்க பட்டது. 8-9ம் வகுப்பில் (1987) சீறி சபாரத்தினம், உமா மகேஸ்வரன், பிரபாகரன், பாலகுமாரன் போன்றோர் எங்களுக்கு பெரும் நாயகர்களாக இருந்தார்கள். இன்றும் எங்கள் வகுப்பில் சீறி சபாரத்தினம் எப்படி மேலே நோக்காமல் கரண்டு கம்பியை சுட்டு அறுப்பார் என்று என் நண்பன் நடித்துக் காட்டியது நினைவில் இருக்கிறது. தேவி, ராணி போன்ற வார இதழ்களில் வரும் கட்டுரைகளை படித்துவிட்டு பள்ளி வாசலில் பல நாட்கள் நின்று எங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று பேசி இருக்கிறேன்.

தமிழினியின் நினைவுகள் அவர் விடுதலை புலிகள் 1991இல் பதினெட்டு வயதில் இயக்கத்தில் இணைவதில் தொடங்குகிறது. அன்றில் இருந்து 18 வருடங்கள் அரசியல் துறை போராளியாகவும், களப்போராளியாகவும் இயக்கத்தின் வெற்றிகளையும், தோல்விகளையும் ஆவணப் படுத்தி செல்கிறது. 1993இல் 'ஆப்பரேஷன் யாழ்தேவி'யில் தொடங்கி நந்தி கடலில் முடிகிறது அவரது இயக்க வாழ்வு. இடையில் அவர் மக்களை சந்திப்பது, இயக்க வாழ்க்கை, தலைவர்கள், முக்கிய சமர்கள், குடும்ப துயரங்கள் என பலவற்றையும் பேசிச் செல்கிறார்.

இந்த புத்தகத்தின் மீதான பெரும்பாலான விமர்சினங்கள் அவர் hindsightஇன் உதவியுடன் புலிகளின் தலைமையும் அவர்கள் எடுத்த முடிவுகளையும் விமர்சிக்கிறார் என்பதே. எனக்கு இதில் ஏதும் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஒரு கோர யுத்தம் முடிந்த பிறகும் அதற்கு காரண கர்தாக்களையும், அந்த யுத்தம் விளைவித்த கோரங்களையும் பார்த்து அதன் காரணங்களை ஆய்வது எப்படி தவறாகும்? தமிழினியின் முடிவுகள் தவறானவைகளாக இருக்கலாம். ஆனால் எனக்கு அவை ஒரு பெண்ணின் பார்வையில் போர் இப்படித்தான் காட்சியளிக்க முடியும் என்றே தோன்றுகிறது.

புலிகள் மேலான எனது ஈர்ப்பு 1991இல் மே 21இல் முடிவுக்கு வந்தது. அதற்கு பிறகான எனது ஈழப்பார்வை அங்கிருக்கும் சனங்களின் மீதான பரிதவிப்பாகவும், இங்கு அதை அரசியலாக்கியவர்களின் மீதான வெறுப்பாகவும் முடிந்தது.

தமிழினியின் வாழ்வு 2009க்கு பின் வெலிக்கடை சிறையிலும், புனர்வாழ்வு மையத்திலும் கழிந்து 2013இல் அவரின் திருமணத்தோடு முடிகிறது. இன்று தமிழினி புற்று நோய்க்கு பலியாகிவிட்டார்.

ஈழ பிரச்சினை பற்றி ஆர்வம் இருக்கும் எவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

View all my reviews

The Mutiny by Julian Rathbone

The Mutiny The Mutiny by Julian Rathbone
My rating: 3 of 5 stars

The 1857 rebellion a.k.a the first Indian war of Independence is a point of interest to me and it is fascinating to read about the different people with a different agendas were able to come together for a cause albeit their selfish motives.
So it was with a lot of interest that I picked up this one to read of the rebellion from the perspective of the British people who lived through it. However, I should say the book for all its promises delivered very little.

For some odd reason, the author insists in the prologue and in the Epilogue that the British did a lot of good things (like they sent only about 1% of the tax revenues back to UK) in India and also insisting that it was not a war of Independence. I was not sure how that related to the story other than showing a glimpse of the author's political leanings.

The answer, as some one from the country where the British did so much good is that, the last famine in India was in 1942 in Bengal and since 1947, after independence, the country never had a famine. And I think while the railways and telegraph were good, it was only developed as a means of moving military transport and any civilian comfort from that was just accidental and I do not want to start on the number of native industries that paid the price to keep Manchester and Birmingham in the middle of the industrial world.. While I don't want to be spoiler of the 'good imperialist' philosophy, I cannot let it go unanswered as well.

Now, back to the book, while it documents the historical incidents more accurately, the story just limps along the unfolding of the events. Sophie, Lavanya, Bruce and almost every fictional character wanders all along the Gangetic plains without any purpose other than be at the next battle or siege. That is sad as the initial chapters of the book on the Meerut barracks were well written.

However, the author in his zeal towards the history keeps losing his characters and by extension us, the readers as well. It could've been an excellent spy story with Bruce in the middle or a tragic love story with Sophie and Bruce as the drivers or it could've been a historical rendering of events. It ends up us nothing. That is a pity.

It is still an interesting book overall if you can forgive the plot holes and focus on the history.



View all my reviews

முள்ளால் எழுதிய ஓலை

முள்ளால் எழுதிய ஓலை முள்ளால் எழுதிய ஓலை by உ.வே.சாமிநாதையர்
My rating: 5 of 5 stars

தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களின் 'என் சரித்திரம்' எனக்கு பிடித்த நூல்களில் ஒன்று. 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதிகளின் தமிழ் வாழ்வை ஆவண படுத்திய நூல் அது. எனவேதான் காலச்சுவடில் இருந்து அவரின் கட்டுரை தொகுப்புகள் ஐந்து பகுதிகளாக வருகின்றன என்றவுடன் இந்த புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டிய புத்தக பட்டியலில் சேர்த்து விட்டேன்.

அந்த ஐந்தில் நான் முதலில் படித்தது 'முள்ளால் எழுதிய ஓலை'. பெரும்பாலும் செவிவழிக் கட்டுரைகள், தனி மனித வாழ்வு சம்பவங்களின் தொகுப்பான இந்நூல் 18-19ம் நூற்றாண்டு வாழ் தஞ்சை தமிழ் மக்களின் வாழ்வின் ஒரு பகுதியை ஆவண படுத்துகிறது. இந்த நூற்றாண்டுகளின் பெரும்பாலான தரவுகள் 20ம் நூற்றாண்டின் பின் பகுதியில் திராவிட, கம்யூனிச அரசியலின் பின் புலத்தில் எழுதப்பட்டவையே. அந்த அரசியல் தாக்கத்தின் முன்னர் தொகுக்க பட்ட கதைகள்/நிகழ்வுகள் வெகு அரிதாகவே இருக்கின்றன. இந்த ஒரு காரணமே இந்த தொகுப்பை ஒரு முக்கிய தொகுப்பாகிறது.

உ.வே.சாவின் அரசியல் என்ன? நான் படித்த வரை அவரின் அரசியல் தமிழாகவே இருக்கிறது. அவரின் ஒவ்வொரு செயலும் தமிழின் வரலாற்றை பாதுகாப்பதும், பேணுவதும் மட்டுமே. சில கதை/கட்டுரைகளில் அந்த கால சாதி அரசியலை அவர் கோடிக் காட்டினாலும் அதை ஒரு விமர்சனமுமின்றி தாண்டி போகிறார். அந்த நிகழ்வை ஆவண படுத்துதல் அன்றி அதன் அரசியலில் நுழைய மறுக்கிறார்.

இந்நூலில் அவர் காட்டும் உலகம் தமிழ் சமூகம் சிறு சமஸ்தானங்களாக இருந்த காலகட்டம். வெள்ளையர்கள் பட்டும் படாமல் 'கிஸ்தி' வசூல் செய்து கொண்டு தமிழ் அரசர்/சமஸ்தானாதிபதிகள் தங்களுக்குள் சண்டை/சச்சரவுகளுடன் இருந்த காலம். இந்த நூலில் பெரும்பாலான கதைகள் சொக்கம்பட்டி (இது திருநெல்வேலி அருகில் உள்ளது) சமஸ்தானாதிபதி பொன்னம்பலம் பிள்ளை, ராமநாதபுர சேதுபதி அரசர்கள், தஞ்சை சரபோஜி ராஜா முதலானோர் பற்றிய நிகழ்வுகளும், உ.வே.சா கேட்ட செவி வழிக் கதைகள் சிலவற்றின் தொகுப்பாகும்.

புத்தக பெயர் உள்ள கதை மருது பாண்டியர் பற்றிய ஒரு கதை. இக்கதையில் வரும் கிராமம் இன்னமும் இருப்பதாய் உ.வே.சா கூறுகிறார். ஒவ்வொரு கதை/நிகழ்வுக்கு பின் குறிப்பில் அதன் கதை மாந்தரின் இன்றைய நிலை குறித்து ஒரு குறிப்பும், அந்த கதை/நிகழ்வு அவருக்கு யாரால், எப்போது கூறப்பட்டது போன்றவற்றை சொல்கிறார். மருது பாண்டியர் பற்றிய மற்றும் ஒரு கதையும் பதிவு செய்கிறார்.

பெரும்பாலான கதை/நிகழ்வுகள் தஞ்சையின் நில சுவான்தார்களாக இருந்த பிராமணர்களை பற்றி இருந்தாலும், அவர்கள் கிராம சூழ்நிலை, வெள்ளையர்களுடன் அவர்களுக்கு இருந்த உறவு, மற்றைய சாதிகளுடன் இருந்த உறவு முதலியவற்றுக்கு பதிவு பெறுகிறது. பறையருக்கு தெருக்கோடியில் மரக்காலில் அன்னம் வைப்பதை கூறுகிறார்.

கோயிலில் தாசிகளை முதுகில் கால் ஏற்றி, பிரம்பால் அடித்து தண்டனை கொடுப்பதையும் அதை எந்த சலனமுமின்றி ஒரு கூட்டம் வேடிக்கை பார்ப்பதையும் பதிவு செய்கிறார்.ஒரு விதத்தில் இந்த புத்தகத்தை படிப்பதும் அது போன்று எந்த முன் முடிவும் இன்றி வேடிக்கை பார்த்தல் போன்றதே. இன்றைய அரசியல் முன் முடிவுகளோடு வாசிக்காது ஒரு வரலாற்று ஆவணமாகவே வாசிக்க வேண்டும்.

மொத்தத்தில் தமிழ் ஆர்வலர் அனைவரும் வாசிக்கவேண்டிய தொகுப்பு.

View all my reviews

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...