முற்றம்

கல்லூரி கை எழுத்து பத்திரிக்கையின் பிரதி. நினைவில் பதிந்து கொள்ள வசதியாக. 

அஞ்ஞாடி - 2

நான் சிறு வயதில் சிவகாசி செல்லும் போது  மின்சாரம் என்பது எப்பவாவது வரும் ஒரு வஸ்து. பெரும்பாலான நாட்கள் விளையாட்டிலும், சினிமா தியேடர்களிலும் செல்லும். இருட்டில் வீட்டில் இருக்கும் என்றாவது ஒரு நாளில் எங்கள் மாம்மை எதாவது பழைய கதை சொல்லுவர். ஒரு முறை கள்ளர்கள் திரண்டு வந்து சிவகாசியை கொள்ளை அடித்த கதை சொல்லி இருக்கிறார். எங்களை இருட்டில் தெருவில் விளையாட விடாமல் செய்வதற்காக சொன்ன கதையாகவே அதை நினைத்திருந்தேன். அவர் கதையில் நாள் பூராவும் நடந்த கொள்ளையில் பலரும் கொல்லப்பட்டதும் பல வீடுகள் கொள்ளை அடிக்க பட்டதும், இரவில் தீப்பந்தங்களோடு கொள்ளை நடந்ததும் கேக்க கொஞ்சம் பயமாகவே இருக்கும்.

நாடார்கள் திருமணத்தின் போது பல்லக்கில் செல்லும் உரிமைக்காக ஆரம்பிக்கும் போராட்டம், அவர்களின் பொருளாதார நிலையின் மீதான தாக்குதலாய் மாறுகிறது. status quo வை நிலைநிறுத்த வரும் ஆங்கில அதிகாரிகள் அந்த பகுதியின் சாதி பின்னணிகளை அறியாமல் போலிசின் உதவியுடன் அடக்கவே முயல்கிறார்கள். இதில் ஆங்கில பாதிரிகளின் குறுக்கீடுகள் வேறு.

சிவகாசி சிவன் கோவிலின் உள் நுழையும் போராட்டம் இதே காலகட்டத்தில் நடக்கிறது. தாங்கள் அதிகமாய் இருக்கும் ஒரு ஊரில் உள்ள கோவிலில் நுழைய முடியாதது நாடார்களுக்கு சாதிய கீழ்மையுடன் தங்கள் பண பலத்தின் வீச்சையும் மட்டு படுத்துவதாய் இருக்கிறது. பத்ரகாளியம்மன் கோவிலுக்கு ஒரு பிராமணரை அர்ச்சகராய் கொண்டு வருவது, பூணூல் அணிவது, சத்ரிய குல நாடார்கள் என்று தங்களுக்கு ஒரு சரித்திரத்தை கொண்டு வருவது என சமூகத்தில் மேல் எழும்பும் ஒவ்வொரு சாதியும் கட்டி எழுப்பும் பிம்பங்களை ஆரம்பித்து வைக்கிறார்கள் (Sanskritization).

50-60 வருடங்களாய் உயர்ந்த சாதி உரிமைகளை விடாது கேட்டு வந்த நாடர்களின் பொருளாதார முதுகெலும்பை உடைப்பது என்பது 1800களின் இறுதியில் நடக்கும் சிறு சிறு கிராம கொள்ளைகளில் ஆரம்பிக்கிறது. சிறு கடைகள், வீடுகள் புகுந்து கொள்ளை அடிப்பது என்று நடக்கும் கொள்ளைகளுக்கு ஆங்கில அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இந்த கொள்ளைகளே நாடர்கள் அதிகம் வசிக்கும், அவர்களின் செல்வ நிலை உயர்ந்து இருக்கும் சிவகாசியை கொள்ளை அடிக்க யோசிக்க வைக்கிறது.

சிவன்  கோவில் நுழைவின் பிரச்சினையில், பதட்டத்தில் இருக்கும் நாடார்கள் சிவகாசியை கொள்ளை இட்டுவிட்டால் அதன் பின் தங்கள் சாதிய நிலை இன்னமும் கீழே போய்விடும் என்று சிவகாசியை காப்பாற்ற தயார் ஆகிறார்கள். செண்பக குட்டி, அய்ய நாடார் போன்றோர் தலைமையில் ஜூன் 6,1899ம் தேதி நடக்க போகும் கொள்ளையை தடுக்க கூடுகிறார்கள்.

சிவகாசி கொள்ளை, எழும் அலையின் உச்சியாய் விழுந்தது. அதன் பின் இருந்த எதிர்ப்புகள் எல்லாம் நீர்த்து போன அளவிலேயே இருந்தது. பெரும் எதிர்ப்பாய் இருந்த மறவர்களும், குற்ற பரம்பரை சட்டம் மற்றும் காவல் பணிகளின் பொறுப்பு ஆங்கில போலீசுக்கு போனதும், அவர்களை தரையில் அழுத்தியது.

1900களில் ஆரம்பித்த விடுதலை போராட்டமும் 1920களில் நடந்த கோவில் நுழைவு போராட்டங்களும் பெரிய எதிர்ப்புகளை காணாது சிவகாசியில் நடந்து முடிகிறது. இதற்க்கு பிறகும் பயணிக்கும் கதை வெகு விரைவில் 1980களுக்கு வந்து முடிகிறது.

கிராமங்களின் சாதிய வேறுபாடுகள், உயரும் பொருளாதார நிலை கொண்டு வரும் மாற்றங்கள், அதன் பொருட்டு மாறும் மனிதர்கள் என்று பூமணியின் கதை செல்கிறது.  

வர்க்க வேறுபாடுகளின் கதையாகவும், பொருள்லாதார மாற்றம் எப்படி சாதிய கட்டமைப்பை மாற்றி போடுகிறது என்பதின் கதையாகவும் விரியும் கதை, சில இடங்களில் வெறும் வரலாற்றின் வர்ணனைகளாய் போய் விடுகிறது. சற்று அலுப்பை கூட்டும் விதமாய் இருக்கிறது இது.

அது போலவே வரலாற்றின் விமர்சனங்கள் எதுவும் இல்லது வைக்க படும் கதை வரலாற்று மனிதர்களின் முன்/பின் நிலைகள் இல்லாது  நிகழ்வுகளின் விளைவுகள் சொல்லப்படாமல் போகிறது. உதாரணமாக ராக்லாந்து  பாதிரியின் செயல்கள் என்ன மாதிரியான எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது என்பது இல்லை. 1000 பக்ககங்கள் விரியும் கதையில் எல்லாவற்றையும் விவரிக்க முடியாதுதான்.

புத்தகத்தின் ஆரம்பத்தில் ஒரு family tree இருந்திருந்தால் கொஞ்சம் உதவியாக இருந்திருக்கும். ஆனால் இந்த மாதிரியான வீச்சு கொண்ட ஒரு கதை தமிழில் எழுதபடுவது அவசியமாகவே தெரிகிறது. இப்பொழுது படித்து கொண்டிருக்கும் 'ஆழி சூழ் உலகு'ம்  இது போன்றே ஒரு ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

வரலாற்று புனைவுகள் படிக்கும் ஆர்வமும், (கொஞ்சம் பொறுமையும்) இருந்தால் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.


நாவல் - அஞ்ஞாடி

பதிப்பாளர் - க்ரியா

விலை - 925 ரூ

அஞ்ஞாடி - 1

படித்து முடித்து ஒரு மாதம் ஆகிறது. 'அஞ்ஞாடி'இன் கதைகள் இன்னமும் முழுமையாக உள் வாங்க படவில்லை. சென்ற வருடமே வந்து இருந்தாலும் 'அஞ்ஞாடி' சிவகாசி கொள்ளை பற்றி பேசுவது மட்டுமே இந்த வருடம் வாங்குவதற்கு உந்துதலாக இருந்தது. 

25 வருடங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைகள் எல்லாம் சிவகாசி வடக்கு ரத வீதியில் இருந்த என் மாம்பா (அம்மாவின் அப்பா) வீட்டில்தான் கழியும். பகல்கள் எல்லாம் பட்டாசு கட்டு ஒட்டவும், சில சமயம் தீப்பட்டித் தாள் ஓட்டுவதிலும் ஓடும். பகல் காட்சி 'ஒலிம்பிக்' சினிமாவிலும், 'பழனியாண்டவர்' பெஞ்சுகளிலும் சிவாஜி, எம்.ஜி.யார் படங்கள் பார்ப்பதும், தேர் இழுப்பது, பத்ர காளி அம்மன் கோவிலுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வேப்பிலை கட்டி போவதும், கோவிலில் குவிந்து கிடக்கும் வேப்பிலையில் உருண்டு விளையாடுவதுமாக விடுமுறை கழியும்.

நெருக்கமான வீடுகள், ஒரு பக்கம் பாட்டி வீடும் (அம்மாவின் பாட்டி) இன்னொரு பக்கம் சின்ன மாம்பா (அம்மாவின் சித்தப்பா) வீடுமாக தெருவின் ஒரு கடைசியில் ஒரு பெரிய குப்பை கொட்டும் இடம்.
அதற்கு அப்புறம் இருக்கும் புல் மார்கெட்டின் குப்பைகள் எல்லாம் இங்கேதான் கொட்டப்படும். மூக்கை பிடித்துக் கொண்டு குப்பை மேட்டை கடந்து புல் மார்கெட்டின் உள்ளே நுழைந்து குவிந்து கிடக்கும் வாழை பழங்களையும், பலாப்பழங்களையும் கடந்தால் சிவன் கோவிலின் சிவன் சன்னதி தெரு வீதியை அடையலாம்.

அஞ்ஞாடியின் கதை ஆண்டி குடும்பனின் சிறு வயதில் ஆரம்பிக்கிறது. அவனுக்கும் வண்ணான் மாரிக்கும் இருந்த நட்பின் கதைகளில் ஆரம்பிக்கும் கதை அவர்களின் கல்யாணம், குழந்தைகள் ஊர் நடப்புகள், கிளைக் கதைகள் என விரிந்துக் கொண்டே செல்கிறது.

கிளைக் கதைகள், வரலாற்று புனைவுகள், அதன் விளைவுகள் என தட தடவென செல்லும் கதை ஒரு விதத்தில் நம் கிராமங்களின் சாதி கட்டுமானங்களின், 1800களில் புதிதாய் உள்ளே நுழைந்த மதங்களின் கதையாகவும் விரிகிறது.

வெவ்வேறு மனிதர்கள். பஞ்சம் பிழைப்பவர்கள், ஊரை அண்டி வாழும் வண்ணார்கள், சாதியின் பெயரால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்று செல்லும் கதை, மூன்று முக்கிய புள்ளிகளில் குவிகிறது.

1870களில் தமிழகத்தில் வந்த தாது வருட பஞ்சம், தென் தமிழகத்தில் நிகழ்ந்த மத மாற்றங்கள், சிவகாசி கொள்ளை. கதை மனிதர்கள் எல்லாம் இந்த மூன்று நிகழ்வுகளிலும் பங்கெடுக்கிறார்கள் மற்றும் பாதிக்க படுகிறார்கள். அவர்கள் வாழ்கை இந்த நிகழ்வுகளுக்கு முன்னும் பின்னுமாய் மாறுகிறது.

தாது வருட பஞ்சம் என்பது கேள்வி பட்டிருந்தாலும், பூமணியின் விவரிப்புகள் மனதை பிசைகிறது. விதை நெல்லையும் சமைக்கும் சம்சாரியில் இருந்து கஞ்சி தொட்டிக்கு போகும் சிறுவர்கள், பசியில் கொத்து கொத்தாய் மரணிப்பவர்கள். பிள்ளையை புதைத்து வந்த நேரத்தில் மனைவியும் இறப்பது, ஒவ்வொருவருக்காக குழி வெட்டாமல் ஒரு நாளைக்கு ஒரு குழி என்று வெட்ட ஆரம்பிப்பது என்று ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பாரத்தை ஏற்றுகிறது.

தாது வருஷ பஞ்சம் அது வரை தென் கிராமங்களில்  சாதி முறையை மாற்றுகிறது. வெள்ளாமை செய்து வந்த குடும்பர்களும் அவர்களுக்கு காவல் முறை செய்து வந்த தேவர்களும் கஷ்ட நிலைக்கு தள்ளப்பட அதுவரை ஊர் பனைஏறிகளாய் இருந்த நாடார்கள் பண புழக்கத்தில் முன் வருகிறார்கள். பேட்டைகளும், மளிகை கடைகளும் ஊர்களுக்குள் பெருகுகின்றது. ஊர் சாதிகளுக்கும் இருந்த பழக்கங்களும் முறைகளும் மெதுவாய் மாற்றம் பெறுகின்றது.

இதே காலகட்டத்தில் (1820-80களில்)நெல்லையை தலைமை இடமாக கொண்ட பங்கின் மூலமாக சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சத்திரப்பட்டி, கழுகுமலை போன்ற ஊர்களில் தீவிரமாக கிறித்துவ மதத்தை பரப்ப பாதிரியார்கள் வருகிறார்கள். அவர்களுடன் பள்ளிகூடங்களும், சாதி ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலைக்கான நம்பிக்கையும் வருகிறது. இவர்களின் கதையும் ஊடாடி வருகிறது. ராக்லாந்து பாதிரி கிறித்துவத்தை பரப்ப இந்த பகுதி கிராமங்களை எல்லாம் சுற்றி வருகிறார்.

மதம் மாறியவர்கள் எல்லாம் அது வரை இருந்த சாதிய கட்டுபாடுகளுக்கு அடி பணிய மறுக்கும் போது புதிய பிரச்சினைகள் எழும்புகிறது. அதுவரை இருந்த பொருளாதார நிலை மாறும் போது, நாடார்கள் பண முதலாளிகலாய் மாறும் போது, அது வரை சாதிய பிரச்சினையாய் இருந்தது இப்போது கௌரவ பிரச்சினையாகவும் மாறுகிறது.

மதம் மாறிய கிறித்தவ நாடார்கள் சாதிய கட்டுபாடுகளை மீறவும், இந்து நாடார்கள் தங்கள் பொருளாதார மேம்பாடு சாதிய தாழ்ச்சியை ஒழித்து கட்டியதாய் கோவில்களில் நுழையும் உரிமைக்கு போராட்டத்தை முன்னெடுக்கின்றனர். அது வரை இருந்து வந்த கட்டு முறைகளை மீற முயலும் இந்த முயற்ச்சிகள் கடுமையான எதிர்ப்பை சந்திக்கின்றன.

எட்டயபுரம் ஜமீனில் உள்ள கழுகு மலையில் பல்லக்கில் போகும் உரிமையை கேக்கும் நாடர்களால் இந்த மோதல் பெரிய கலவரமாய் வெடிக்கிறது. 1895இல் கழுகுமலை ரத வீதியில் கிருத்துவர்கள் போட்ட பந்தல் தேர் சுற்றி வர தடையாய் இருப்பதாக சொல்லி ஏற்படும் கலவரத்தில் 10 உயிர்கள் பலியாகின்றன. எட்டயபுரம் ஜமீனின் மேனேஜர்ரும் இந்த கலவரத்தில் செத்து போகிறார்.

Letter for Father - Vanathy

The Ship
I know the ship is
beautiful. I make this
ship with blocks. The name
of the ship is
safety and tower ship.

 

The Letter
Because look at the 
top of the ship it looks
like a tower and look at the
steps to the tower see the first
steps there are going to the
water. I want gift you look at
the phone for you. Because you tell it
is beautiful.

Vanathy
12/3/13

Nostalgic - 7 அம்மாவின் வீடு

சில மாதங்களுக்கு முன் அம்மாவின் சிவகாசி வீடு விற்கப்பட்டது. அன்று காலை அம்மா பத்திர பதிவுக்கு சென்று விட்டு வந்தார். சிவகாசியுடன் இருந்த கடைசி தொடர்பும் விட்டது.

எனக்கு  முதல் நினைவு அந்த வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கிறது. என் தம்பி பிறந்த பொழுது என் அம்மா அங்கே இருந்தார். எனக்கு ஒரு நான்கு வயது இருக்கும். இரவில் சரியாக தூங்காமல் இருப்பேன். அப்போது  என் மாம்பா (அம்மாவின் அப்பா) என்னை தூக்கி கொண்டு தெருமுக்கில் இருந்த குழாயடியில் உக்கார்ந்து இருப்பார். இரவின் நிசப்தம், ஆள் நடமாட்டம் இல்லாத தெற்கு ரத வீதி இன்றும் நினைவில் இருக்கிறது.

என் அம்மாவின் வீடு அந்த தெருவின் உள்ளே ஒரு சிறு சந்தில் இருந்தது. மொத்தம் ஒரு பத்து வீடுகள் இருக்கும். கடைசி வீட்டுக்கு முந்தைய வீடு என் அம்மாவின் வீடு. கடைசி வீடு அம்மாவின் சித்தப்பாவின் வீடு. என் அம்மாவின் பாட்டி வீடும் அதில்தான் இருந்தது. எல்லா விடுமுறைக்கும் அங்கு சென்று விடுவோம். நிறைய சந்தோஷமான நாட்கள். சில கஷ்டமான நாட்களின் நினைவுகளுடன் விற்கப்பட்டுவிட்டது.

25 வருடங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைகள் எல்லாம் சிவகாசி தெற்கு ரத வீதியில் இருந்த என் மாம்பா (அம்மாவின் அப்பா) வீட்டில்தான் கழியும். பகல்கள் எல்லாம் பட்டாசு கட்டு ஒட்டவும், சில சமயம் தீப்பட்டித் தாள் ஓட்டுவதிலும் ஓடும். பகல் காட்சி 'ஒலிம்பிக்' சினிமாவிலும், 'பழனியாண்டவர்' பெஞ்சுகளிலும் சிவாஜி, எம்.ஜி.யார் படங்கள் பார்ப்பதும், தேர் இழுப்பது, பத்ர காளி அம்மன் கோவிலுக்கு கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி வேப்பிலை கட்டி போவதும், கோவிலில் குவிந்து கிடக்கும் வேப்பிலையில் உருண்டு விளையாடுவதுமாக விடுமுறை கழியும்.
"ஆஹோய் அல்லாஹோய்
ஆத்தாத்தா பெரியாத்தா
அம்பது பிள்ளை பெத்தாத்தா
உனக்கு நாலு
எனக்கு நாலு போடாத்தா
ஆஹோய் அல்லாஹோய்
ஆத்தாத்தா பெரியாத்தா
கறியும் சோறும் போடாத்தா "
என்று பாட்டுப் பாட போவதற்கு முன் கரிக்கட்டையையும், சுண்ணாம்புவையும் உரசி மேலெங்கும் கரும் புள்ளி செம்புள்ளி குத்தியது அந்த வீட்டின் குளியலறையில்தான்.

பக்கத்து வீட்டு பரமேஸ்வரியக்காவின் பிள்ளைகளுடன் சிறு வயதில் இருந்து சிநேகிதம் கொண்டதும், இரவு பகலாய் தாயம், trade, பரமபதம் விளையாண்டதும் இந்த வீட்டில் இருந்த போதுதான். இரவு முழுவதும் விழித்து இருந்து சூரன் குத்து பார்த்தது, விழித்து இருப்பதற்காக விடிய விடிய தாயம் விளையாடுவது என்று பொழுது போகும்.

குமார் அண்ணாச்சியுடன் மாடியில் புரிந்தும் புரியாமலும் வானியலும், இந்து ஆன்மீகமுமாக ஒருவாறு கலந்து கட்டி எனது புத்தக தேடல்கள் ஆரம்பித்ததும் இங்கிருந்துதான்.

வீடு ஒரு பெரிய ஹாலும், மிகச் சிறிய சமையலறையும், இன்னொரு பெரிய குளியலறையும் மட்டுமே கொண்டது. வீட்டின் ஊடே படிக்கட்டுகள் வழியாக மாடியில் ஒரு பெரிய ஹால். சிறு மொட்டை மாடி, என்றுமே தண்ணி இல்லாத ஒரு சிறு தொட்டி, அந்த தொட்டியில் இருந்து பக்கத்துக்கு கழிப்பறைக்கு ஒரு குழாய்.

என் மாம்பா ஒரு பழைய காங்கிரஸ்காரர் ஆதலால் எப்போதும் கதர்தான் கட்டுவார். அதை வெளுப்பதற்கு ஒரு வண்ணான் வீடிற்கு வருவார். அந்த நாள் ஒரு ஓரத்தில் இருக்கும் அழுக்கு பெட்டி திறக்கப் படும். நானும் தம்பியும் குவிந்து கிடக்கும் ஆளுக்கு துணிகளில் விளையாடுவோம். 'சின்ன முதலாளி' என்று வண்ணான் கூப்பிடும்போது தலையில் கொஞ்சம் போதை ஏறி கிறுகிறுக்கும். தோட்டி சுந்தரம் குளியலறை வாசல் வழியாக வந்து சுத்தம் செய்துவிட்டு ஒரு அலுமினிய தூக்கில் என் மாம்மை தரும் பழைய சோற்றை வாங்கிக் கொண்டு போகும்.

சிவகாசி வீட்டில் ஒரு நாள் என்பது காலையில் என் மாம்பாவுடன் உடுப்பி ஹோட்டலுக்கு செல்லுவதில் தொடங்கும். தம்பி கேசரியும், நான் வேறு எதாவது பண்டமும் சாப்பிட்டுவிட்டு, அன்றைய செய்தி தாள்களை வாங்கிவிட்டு திரும்புவதில் ஆரம்பிக்கும். 'தினத்தந்தி' 'தினமலர்' என விற்பனையில் இருக்கும் அனைத்து செய்தி தாள்களும் வாங்குவார். வீட்டிற்க்கு வந்து காலை சாப்பாடு, குளியல் முடித்து விட்டால் பிறகு முழுவதும் ஆட்டம்தான். 10-11 மணி வாக்கில் மாம்பா வெள்ளை வேஷ்டி, வெள்ளை கதர் சட்டையுடன் வெளியே கிளம்புவார்.
கட்டு ஓட்டுவது, விளையாடுவது போன்று சில மணி நேரம் கழியும். மதிய சாப்பாடு. மாம்பா 2-3 மணி போல் வீடு திரும்புவார். சாப்பிட்டு, ஒரு மணி நேரம் தூங்குவார்.

திரும்பவும் 4 மணிவாக்கில் மாம்பா வெளியே கிளம்புவார். இந்த முறை நானும் என் தம்பியும் கூடவே கிளம்புவோம்.
புல் மார்கெட் வழியே நடந்து சிவன் கோயில் எதிரே இருந்த மூப்பனார் கடையில் ஒரு லைம் சோடா. அங்கிருந்து அப்படியே நடந்து பெரிய தேரடியில் இருக்கும் வேலாயுத நாடார் கடைக்கு பக்கத்தில் இருக்கும் 'பாண்டியன் ஐஸ் லேன்ட்'ல் ஒரு ஜூஸ்.
அப்புறம் வேலாயுத நாடார் கடையில் கொஞ்சம் தின்பண்டம். அங்கே இருக்கும் புத்தக கடையில் அன்று வந்து இருக்கும் எல்லா புத்தகங்களும் வாங்குவார். நானும் எதாவது காமிக்ஸ் புத்தகங்கள் வாங்குவேன். அங்கிருந்து நானும் தம்பியும் வீடு திரும்பி விடுவோம். நீண்ட நாட்கள் என் மாம்பா என்ன வேலை செய்கிறார் என்பதே தெரியாமல் இருந்தது.

சாயங்கால வேளைகளில் பல நாட்கள் மின்சாரம் இருக்காது. வீட்டு வாசலில் ஒரு அரிக்கேன் விளக்குடன் உக்கார்ந்து பல கதைகள் பேசிக் கொண்டிருப்போம். இருட்டிலேயே சாப்பிட்டு விட்டு பல நாட்கள் தூங்கிவிடுவோம்.
அந்த வீட்டின் மாடியில் இருக்கும் ஹாலில் நானும் தம்பியும் பல நாட்கள் ஒரு கயிறைக் கட்டி டென்னிஸ் விளையாடி இருக்கிறோம். அங்கே கட்டி வைக்க பட்டிருக்கும் சாக்கு பைகளில் இருக்கும் பல மாத புத்தகங்களில் சுஜாதாவையும், கல்கியையும் வாசித்துப் பழகி இருக்கிறேன்.
அங்கே இருந்த ஒரு அலமாரியில் என் அம்மா B.A படித்ததின் எச்சமாய் கிடைத்த புத்தகங்களில்தான் எலியட்டும், அந்தோணி ஹோப்உம், டுமாஸ்சும் அறிமுகமானார்கள். அங்கிருந்த மணியனின் 'அமெரிக்க பயண நினைவுகள்'தான் மதுரையை தாண்டியும் ஒரு உலகம் உள்ளது என்று காட்டியது.

அம்மாவின் தாத்தாவின் திதியில் வீடியோ டெக் எடுத்து விடிய விடிய படம் பார்ப்பது. வீடு நிறைய அம்மாவின் அத்தைகளும், சித்திகளும், மாமாக்களும் அவர்களின் பிள்ளைகளுமாய் நிரம்பி வழியும் நாட்கள். மனோன்மணி அக்காவின் (என் அம்மாவின் அத்தை) உரத்த சிரிப்பும், இடைவிடாத நக்கலும், அம்மாவின் பதில்களுமாய் ஒரு சந்தோசமான உலகமாய் இருந்தது.

பழனி சென்ற போது மாரடைத்து என் மாம்பா இறந்து வந்த பொழுது அந்த வீட்டின் சந்தோசங்கள் எல்லாம் வடிந்தது. வீட்டின் நடுவே பிணமாய் பார்த்த அன்று வாழ்க்கையில் என்னை விழாது பிடிப்பார் என்று நினைத்திருந்தவர் போன துக்கம் தொண்டையில் நின்றது.

அந்த 12ம் வகுப்பு விடுமுறையும் அங்கேதான் கழிந்தது. கொஞ்சமும் சந்தோஷமில்லாத, என் மாம்மையின் தனிமையை மட்டுமே பார்த்த நாட்கள். அதன் பின் மாடி மட்டும் வாடகைக்கு விடப்பட்டு அந்த வீடு துண்டுகளாய் சிதைந்து போனது. 6 வருடங்களுக்கு முன் மாம்மையும் இறந்த பிறகு, மாமாவின் பிள்ளைகளுக்காய் விற்கப் பட்டு நினைவுகள் மட்டுமே மிச்சமாய், அந்த வீட்டின் உடனான கடைசி சரடும் விட்டுப் போனது.

Vanathy and A Sonnet

Finally I bought a new bookshelf for the house. And after it was delivered and fitted, we decided to put the books arranged in the shelf. The kids were helping me out in bring the books from the cup board where they were languishing all these days and help in arranging the books in the shelf.

While getting the books arranged, Vanathy got attracted to a book. It was 'Sonnets from the Portuguese and other love poems' by Elizabeth Barrett Browning. She saw the word 'poem' and took the book out for reading herself. 

She has been reading and when I asked she answered that she could understand what is being read. So here is the rendition of sonnet XI from the book by Vanathy. For those of you who need help, the lyrics are below.
 
"And therefore if to love can be desert,
I am not all unworthy. Cheeks as pale
As these you see, and trembling knees that fail
To bear the burden of a heavy heart,---
This weary minstrel-life that once was girt
To climb Aornus, and can scarce avail
To pipe now 'gainst the valley nightingale
A melancholy music,---why advert
To these things? O Belovèd, it is plain
I am not of thy worth nor for thy place!
And yet, because I love thee, I obtain
From that same love this vindicating grace,
To live on still in love, and yet in vain,---
To bless thee, yet renounce thee to thy face."

எரியும் பனிக்காடு

சமீபத்தில் ஒரே இரவில் படித்து முடித்த புத்தகம். 400 பக்கங்கள். மொழி பெயர்ப்பு என்பதை எல்லாம் தாண்டி ஏதோ ஒன்று புத்தகத்தின் பக்கங்களில் கட்டி போடுகின்றது

'Red Tea' என்ற புத்தகத்தை பற்றி கேள்விபட்டது பாலா 'பரதேசி' எடுக்க ஆரம்பித்த பின்தான். அதிலும் பெரிய ஆர்வம் வரவில்லை. பாலாவின் படங்களின் repetitiveness ரொம்பவே அலுப்பூட்ட ஆரம்பித்துவிட்டதால், கடைசியாக எடுத்த படங்கள் ஏதும் பார்க்கவும் இல்லை.
எனவே புத்தக காட்சியில் இந்த புத்தகத்தை பார்த்த போது சற்று யோசனையாக இருந்தது. இருந்தாலும் வாங்கினேன்.

வரலாறு பற்றிய நமது பிரக்ஞை பற்றி கேட்க வேண்டியதில்லை. ஒரு காவியத்தனமான  கற்பனையை வரலாறாக தெளிந்திருக்கும் சமூகம் இந்த உலகிலேயே நாமாகத்தான் இருக்க முடியும். அதனாலேயே நமக்கு நமது மக்களின் வாழ்கையை பற்றிய வரலாறுகள் பெரிதாக இல்லை.

1850களில் இருந்து தமிழகத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க பல நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் சென்ற தமிழர் வரலாறு என்று ஒன்றே இல்லை. இப்போதும், பிஜியிலும் மலாயாவிலும் தென் இலங்கை மலையக தமிழர்கள் பற்றியும் எந்த ஒரு பெரிய வரலாற்றுப் புரிதலும் நமக்கு இல்லை. வெகு சில நூல்களே இவர்களை பற்றி பேசுகின்றன.

'எரியும் பனிக்காடு' தமிழகத்திலேயே அடிமைகளாய் விற்கப்பட்ட தாழ்ந்த சாதி மக்களின் வரலாற்றை பேசுகிறது.

1925. திருநெல்வேலி அருகே ஒரு கிராமம். வள்ளி, கருப்பன் இருவரும் அன்றாடம் பிழைப்புக்கு வழியின்றி இருக்கும் நேரம். கருப்பன் கயத்தாறில் பார்க்கும் சங்கரபாண்டியன் மேஸ்த்ரி (கங்காணி) மலை பிரதேசத்தில் வெள்ளைக்கார துரையிடம் வேலை  வாங்கி தருவதாக சொல்லி கூட்டிச் செல்கிறான்.

திருநெல்வேலியே பார்த்தறியாத இருவரும் ரயில் ஏறி வால்பாறை அருகே
உள்ள ஒரு தேயிலை தோட்டத்திற்கு வந்து சேர்கின்றார்கள். இரண்டு அறை  கொண்ட  லைன் வீட்டில் மூன்று குடும்பங்கள். கழிப்பறை வசதி கிடையாது. தாங்க மாட்டாத குளிரில் எந்த வசதியும் இன்றி தங்க வைக்க படுகிறார்கள். அதுவரை தேனாய் பேசி வந்த மேஸ்த்ரி அங்கு வந்ததும் தன் சுயரூபம் காட்டுகிறான்.

தோட்டத்திற்கு வருவதற்கும் வாங்கிய முன் பணம், வந்தவுடன் வாங்கும் காளி செட்டியிடம் படும் சில்லறை கடன்கள் என்று அவர்கள் அங்கிருந்து  வெளியேறா வகையில் கட்டி போடப்படுகிறார்கள்.

 வந்த சில நாட்களிலேயே அங்கிருக்கும் நிலை தெரிந்தும் வெளியேற முடியாத நிலை. மலையில் இருந்து இறங்க முடியாத நிலையில் இருக்கும் பாதைகள்.   தப்பித்து ஓடினால் வெள்ளைக்கார போலீஸ் கிராமத்திற்கே வந்து திரும்ப பிடிக்கும். சட்டம் அப்படி.

அணாக்களுக்கும் பைசாவுக்குமாக வேலை செய்து ரூபாய்களில் இருக்கும் கடனை அடைக்க வேண்டும். வெள்ளை துரைகளின் சில்மிஷங்களை சகித்துக் கொண்டு ஒத்துழைத்தால் மட்டுமே பணம் சேர்க்க முடியும் என்ற நிலை. ஆங்கில ஆட்சியின் இந்த முகங்கள் எல்லாம் பேசப்படாதவை. கொழுந்து கிள்ளும் வேலை செய்யும் பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஒத்து போனால் மட்டுமே கணக்கு நேராகிறது.

மழைக்காலத்தில் வரும் மலேரியா காய்ச்சல் எடுத்து போகும் உயிர்கள், பிள்ளை பெறும் பெண்கள் மருத்துவ வசதி இன்றி சாவது ஒரு புறம். வார்டு பாய் மட்டுமே உள்ள மாட்டுத் தொழுவ ஆசுபத்திரி. போட்ட பணத்தை மட்டுமே எடுக்க வேலைக்கு விரட்டும் கங்காணி. இவர்களை எல்லாம் இந்த இடங்களில் வைப்பதன் மூலம் தனது மூலதனத்தை அதிகரிக்கும் பிரிட்டிஷ் முதலாளிகள்.

இந்திய உயிர்களை வெறும் 'expendable' மூல பொருட்களாய் வைத்துதான் லாபம் பார்க்க முடியும் என்று ஒரு சித்தாந்தமே கண்டறிந்த ஆங்கில முதலாளிகளுக்கு கண்காநியகவும், கூட்டி கொடுக்கும் மாமாக்களாகவும் இருந்து சொத்து சேர்க்கும் இந்திய குட்டி முதலாளிகள் என்று போகும் இந்த பாதையில் வெறும் எண்ணிக்கையாக மறைந்து போகும் உயிர்கள்.

இந்த வேலைக்கு வருவது எல்லாம் சொந்த கிராமங்களில் மேல் சாதியினரிடம் மிதிபடும் தாழ்ந்த சாதியினர். வெள்ளைத் துரை தனது தாழ் நிலையை மாற்றிவிடுவான், தானும் ஒரு மனிதனாக மதிக்க படுவோம் என்று வந்து ஏமாந்து போனவர்கள்.

கதையின் இறுதியில் வரும் ஒரு மருத்துவர், பி.எச்.டேனியல்  தேயிலை தோட்டங்களில் வேலை பார்த்த ஒரு மருத்துவர், அங்கிருக்கும் நிலைமையை மாற்ற முயல்கிறார். டேனியல் 1940களில் கண்ட தனது அனுபவங்களையே இந்த கதையாக எழுதினார். சுதந்திரதிற்க்கு பிறகு நிலைமை சற்று மாறினாலும் இன்றும் மலை தோட்டங்கள் கடும் உடல் உழைப்பின் மூலதனத்திலேயே இருந்து வருகின்றன.

கதை பல தளங்களில் எந்த வித போதனைகள், மார்க்க சிந்தனைகள் இல்லாமல் நிதர்சன வாழ்க்கையின் ஊடே நம்மை சிந்திக்க வைக்கிறது. இன்றைய பொருளாதார நிலை என்ன என்று அதனையும் 1930களின் தேயிலை தோட்ட நிலையும் ஒப்பிட்டால் பெரிய வித்தியாசம் இல்லை. இன்றும் பஞ்சம் பிழைக்க அமெரிக்காவிற்கும். வளைகுடா நாடுகளுக்கும் செல்லும் நமது நிலையில் என்ன மாறுபாடு வந்து விட்டது?

முருகவேளின் மொழிபெயர்ப்பு நன்றாக இருந்தாலும் ஆங்காங்கே நெல்லை தமிழின் ஊடே செம்மொழி பேச்சுக்களை தவிர்த்து இருக்கலாம். அது தவிர நேரடி தமிழ் நாவல் படித்த உணர்வே இருக்கிறது.

நாவல் - எரியும் பனிக்காடு
பதிப்பகம் - விடியல்
   

The Discovery and Conquest of Peru - Zarate.

பழைய புத்தக விற்பனையின் போது இந்தப்புத்தகத்தை வாங்கினேன். 1528ம் வருடம் ஸ்பானிய வீரர்கள், இன்றைய பனாமாவின் பசிபிக் கடற்கரைகளில் இருந்து தெற...